தாராபுரம், ஆக.31 - காங்கயம் கலால் மேற் பார்வை அலுவலராக பணி யாற்றி வந்த கோவிந்தசாமி தாராபுரம் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண் டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜெகஜோதி தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பொறுபேற்று கொண்டார். புதிய வட்டாட்சியர் கோவிந்தசாமியை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.