districts

மனைபட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

தருமபுரி, செப்.30- பட்டியலின மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பென்னாகரம் அருகே குடி யேறும் போராட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சி, கடமடை வருவாய் கிரா மத்தில் உள்ள சர்வே எண்:40/2பி-யில் 9.88 ஏக்கர் நிலத்தில் மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 2001 ஆம் ஆண்டிலி ருந்து 11 கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்கள் போராடி வருகிறார்கள். அம்மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தில், பட்டா வழங்கக்கோரி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகும், அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இந்த போக்கை கண்டித்தும், உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோழர் பி.சீனி வாசராவ் நினைவு தினமான திங்க ளன்று, கடமடை 5 ஆவது மைல்கல் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் குடி யேறும் போராட்டம் நடைபெற் றது. இதனையடுத்து போராட்டக் களத்திற்கு நேரில் வந்த பென்னா கரம் வட்டாட்சியர் ஆறுமுகம், வரு வாய் ஆய்வாளர் விஜயசாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சக்தி வேல் ரத்தினவேல், பென்னாகரம் துணை காவல் கண்கணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோர் அமைப்பின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மஞ்சநாய்க் கனஅள்ளி, கலப்பம்பாடி ஊராட் சிக்குபட்ட 11 கிராமங்களில் வசிக் கும் பட்டியலின மக்களுக்கு ஏற்க னவே ஒதுக்கப்பட்ட 9.88 ஏக்கர் நிலத் தில், ஒரு மாதத்திற்குள் நில அளவை செய்து மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த னர். இதனையடுத்து போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத் திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில சிறப்புத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன், செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் கே.கோவிந்த சாமி, மாநிலக்குழு உறுப்பினர் டி. மாதையன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.சிசுபாலன், மூத்த தலை வர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன் எம்.முத்து, வி.ரவி, சோ.அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா, ஒன்றியச் செயலாளர் ஜி.சக்தி வேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் மா.தேவன், செயலாளர் ஜே.பி.சுப்பிரமணி, பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.