districts

img

இ ஃபைலிங் முறையை ரத்து செய்திடுக

கோவை, அக்.11- நீதிமன்றத்தில் இஃபைலிங் முறையை ரத்து செய்ய  வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, தருமபுரி உள்ளிட்ட  மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளை இ ஃபைலிங் முறையில் பதிவு செய்யும் முறையை அனைத்து நீதிமன்றங்களில் நடைமுறையை அமல்படுத்தி உள்ள நிலையில்,  இதனால்  தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இந்த இ ஃபைலிங்  முறை என்பது ஆன்லைனில் வழக்குகளை பதிவு செய்யும்  போது இன்டர்நெட் இணைப்புகளில் வேகம் குறைவாக இருப்பதாலும் , இதனால் குறித்த நேரத்திற்கு வழக்குகளை பதிவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், வழக்காடி களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் முறையாக வழக்குகள் நடத்தமுடியாமல் சிரமத்திற்க்கு உள்ளாகி வரு கின்றனர். தற்போது முறையாக உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வழக்குகள் முடிக்கமுடியாமல் அதிகளவு தேங்கி கிடக்கிறது. இந்த இஃபைலிங் பதிவு செய்ய புதிதாக  வரும் வழக்கறிஞர்கள்  அனுபவம் இல்லாமல்  சிரமம் ஏற்படுகிறது எனவும், மேலும் அனைத்து நீதிமன்றத்திலும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான பிறகு இந்த இ ஃபைலிங்  முறையை பயன்படுத்த வேண்டும். அதுவரை இந்த இ ஃபைலிங் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வழக் கறிஞர்கள் சங்கம் சார்பில்  கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரியும்,எதிர்ப்பு தெரிவித்தும் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்கத்  தலைவர் பி.கே.முத்துசாமி தலைமை ஏற்றார். இதில், மூத்த  வழக்கறிஞர் அசோகன், சங்க செயலாளர்.எம்.வீராசாமி, இந்த ஆர்ப்பாட்டத்தில் பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சி.மாதையன், ஜானகிராமன், முன்னாள் துணை தலைவர் வேலு மற்றும்  வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சரவணன்,  தமிழரசன், நூலகர் வெங்கடேசன் உட்பட ஏராளமான வழக்க றிஞர்கள் கலந்து கொண்டனர்.