districts

img

கையடக்கத்தில் அப்துல்கலாம் சிந்தனை

கோவை, ஜூலை 27- அப்துல்கலாமின் சீரிய சிந்தனைகளின் கையடக்க புத்தகத்தை பள்ளி மாணவர் களுக்காக 7 மொழிகளில் பொறியாளர் ஒருவர் தயார் செய்து, விநியோகித்து வரு கிறார். மறைந்த முன்னாள் குடி யரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாமின், 8 ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று இந்தியா முழுவ தும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராம பள்ளிகளில் பயின்று  வரும் மாணவர்களுக்கு, அப்துல் கலாம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவரது பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத் தகத்தை கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42) என்பவர், கலாமின் 2 செ.மீ உய ரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்டதாக தயார் செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்ன டம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சி டப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங் கப்பட உள்ளது. ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள் ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்க ளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், விரைவில் 22 மொழிகளில் கலாமின் பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பொறியாளர் லூயீஸ் தெரி வித்துள்ளார்.