சென்னை, ஆக. 19- தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வேண்டும் என்று தமிழக அரசை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழிவகைகளா கண்டறிவதற்கு மாறாக, ‘இ’ - வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989ஐ திருத்தியுள்ளது. கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக, பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்து ஐந்து மாதங்களாகும் நிலையில். அதனை தனியார் கைக்கு மாற்றி விடும் மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டு வருவதை எதிர்த்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட் டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங் களை இணைத்து, இரவு, பகலாக இயங்கி வரும் அரதப் போக்குவரத்துக் கழகங் களின் பேருந்துகள் தினசரி 2.5 கோடி மக்க ளுக்கு சேவை புரிந்து வருகின்றன.
மேலும் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளர்கள், கலைஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் என பல தரப்பினருக்கு இல வசமாகவும். சலுகை கட்டணத்திலும் சேவை அளித்து வருகின்றது. இவை அனைத்தை யும் ரத்து செய்யும் நோக்கம் கொண் டுள்ளது. தனியார் வாகனங்களை வாடகைக்கு போவது. அதற்கான ஒப்பந்தம் செய்வது. பாதை ஒதுக்குவது என எல்லா நிலைகளி லும் கமுக்கமாக “கல்லாக் கட்டும்” செய லில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசை இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி, வன்மையாகக் கண் டிக்கிறது. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்க வழி செய்யும், மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989ஐ திருத்தம் செய்து, புதிதாக பிரிவு 288 ஏ என்பதை கூடுதலாக சேர்த்து ஜூலை 27 ஆம் தேதி வெளி யிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.