districts

img

அரசுப்பணிகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிடுக

கோவை, மே 28– புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சனி யன்று தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் தர்ணா போராட் டங்களில் ஈடுபட்டனர். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஒன்றிய, மாநில அரசு காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் வேலைக் காக காத்திருக்கும் இளைஞர் களை கொண்டு நிரப்பிட வேண் டும். அரசுத் துறையில் அவுட்சோர் சிங், ஒப்பந்தமுறை நடைமுறைப் படுத்தக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் நாடு தழு விய கோரிக்கை நாள் கடை பிடிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை சிவானந்த காலனியில் கோரிக்கை  நாள் தர்ணா போராட்டம் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் சி.எஸ்.பால்ராஜ் தலைமை தாங்கினார். தெற்கு வட்டக்கிளை செயலாளர் கருணாநிதி வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனி வாசன், மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மதன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஆர்.மகேஸ்வரன், சத்து ணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்ட தலைவர் சி.தனபால், இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க கோவை கோட்ட செய லாளர் துளசிதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான அரசு  ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலை வர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலா ளர் சி.நாகராசன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில், மாவட்ட துணைத் தலைவர்கள் சி.காவேரி, டி.சண்முகம், மாவட்ட இணை செயலாளர்கள் சி.அழகிரி, கார்த்திகேயன், மாவட்ட தணிக் கையாளர் எம்.முனிராஜ்‌ ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்ட  செயலாளர் சங்கர், காப்பீடு ஊழி யர் சங்க கோட்ட இணைச்செய லாளர் ஏ.மாதேஸ்வரன், தமிழ் நாடு வேளாண் அமைச்சு பணி யாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஆர்.ஜெயவேல், அரசுத் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெரு மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். முடிவில், அரசு ஊழியர் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள் நிறைவுரை யாற்றினார்.

ஈரோடு

ஈரோட்டில் எல்ஐசி அலுவல கம் எதிரில் நடைபெற்ற போராட் டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் எஸ்.விஜயமனோக ரன் வரவேற்றார். மாநில செயலா ளர் அ.குபேரன் தொடக்க உரை யாற்றினார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயலாளர் என்.ராமசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கண்ணன், அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலா ளர் ஆ.இளங்கோவன் உள்ளிட்ட  துறைவாரியான சங்க நிர்வாகி கள் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கே.குமரேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.

சேலம்

சேலம் கோட்டை மைதானத் தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.திருவேரங்கன் தலை மையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை காப்பீட்டு கழக  ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஆர்.தர்மலிங்கம் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், சிஐ டியு சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைத் தலை வர் எஸ்.கே.தியாகராஜன், வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வே. அர்த்தனாரி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் சுப்பிரமணியன், தமிழ் நாடு அரசினர் தொழிற்பயிற்சி அலு வலர் சங்க மாநில பொருளாளர் என். திருநாவுக்கரசு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் வெங்கடேஷ், இந்திய மாணவர் சங்க நிர்வாகி முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர்.  அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் குபேரன் நிறைவுரையாற்றினார். முடிவில்,  மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.  இப்போராட்டத் தில் 500-க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.