தருமபுரி, ஜூன் 28- மின்வாரியத்தை கூறுபோடும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண் டும் என வலியுறுத்தி, மின் ஊழியர் கள் வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்திலுள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப் பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட் டுள்ள ‘டவலப்மென்ட் டிஸ்கவுன்ட்’ உத்தரவுகளை திரும்பப்பெற வேண் டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து, தனியார்மயப்படுத்தும் நடவ டிக்கையை கைவிட வேண்டும். பணியா ளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய, பணப்பயன்களை வழங்க காலதாமதம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி ரூ.5 லட்சத்தை மின் வாரியத்தி லும் அமல்படுத்த வேண்டும். மின்விபத் தில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப் படும் என அறிவித்ததற்கான அர சாணை, வாரிய உத்தரவு வெளியிட வேண்டும். 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த் தைக்கான குழுவை அமைக்க வேண் டும். 01.12.2019க்கு பின் வாரியப்பணி யில் சேர்ந்தவர்களுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வி.வெண்ணிலா தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.ஆ றுமுகம், பி.குமரவேல், எஸ்.சிவக் குமார், மாவட்ட இணைச்செயலாளர் கே.ஜெகநாதன், ஏ.கோவிந்தன், பொறி யாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூரத்தி, அதியமான் கோட்டை உபகோட்டச் செயலாளர் ஆர்.முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.திம்மரா யன் நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு மின்ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மண்டலச் செயலாளர் சி.ஜோதி மணி, கிளைச் செயலாளர் வி.ஸ்ரீதேவி, கோட்டச் செயலாளர் விஸ்வநாதன் உட் பட திரளான மின்ஊழியர்கள் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் த.ம ணிகண்டன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.காளிமுத்து, கோவை மாந கரத் தலைவர் வீ.மதுசூதனன், பொரு ளாளர் ஏ.சாதிக் பாஷா, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் வி.விவேகானந் தன், பி.லோகநாதன், மைய கோட்ட தலைவர் எஸ்.விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.