districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிடுக – சிபிஎம் எதிர்ப்பு

உதகை, டிச. 4- ஒன்றிய மோடி அரசு கொண் டுவந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கும் இயக்கம் நடை பெற்றது. ஒன்றிய மோடி அரசின் உதய் மின் திட்ட நடவடிக்கையால் இல வச மின்சாரத் திட்டங்களை பறிக்கும்  விதமாக வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட  எதிர்கட்சிகள் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுதியில் நடைபெற்ற மனு  கொடுக்கும் இயக்கத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகா உறுப் பினர் என்.எல்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் அலியார், தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன், தாலுகா உறுப்பினர் ராஜ ரத்தினம், தாய்சோலை கிளைச் செயலாளர் மாதேவன், குந்தா கிளை உறுப்பினர் எஸ்.முரளி உள் ளிட்ட ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஈரோடு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் பவா னியில் வீடு தோறும் மின் இணைப்பு  எண்னுடன் மனுக்கள் எழுதி பவானி, ஜம்பை, பெருந்தலையூர், சலங்கபாளையம், ஊராட்சி கோட்டை ஆகிய இளநிலை பொறி யாளர் அலுவலகங்களில் மனு  கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது.  இந்த மனு கொடுக்கும் இயக் கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, தாலுகாச் செ யலாளர் எஸ்.மாணிக்கம், மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.ஜெக நாதன் மற்றும் தாலுகா கமிட்டி  உறுப்பினர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.