திருப்பூர்,ஜன.4- சுழற்சி முறையில் பணி நிறுத்தம் செய்வதை கைவிடக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக சிஐடியு டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் மாநில ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுழற்சி முறையில் பணி நிறுத்தம் செய்வதை கைவிட வேண்டும், தொடர்ந்து பணி வழங்க கோரியும், டிபிசி தொழிலாளர் அனைவருக்கும் பணியாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி தொகைப் பிடித்தம் செய்த விப ரம் உட்பட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.பணி பாதுகாப்பு, போதிய பணி உபகரணம், சீருடை, பய ணப்படி உள்ளிட்டவை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.புவனேஸ்வரி ஆர்ப்பாட் டத்திற்கு தலைமை ஏற்றார். கோரிக் கைகளை விலக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உன் னிகிருஷ்ணன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச் சாமி, சம்மேளனக்குழு உறுப்பினர் என்.சங்கர்குமார், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.ஈஸ்வ ரன், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பி.சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.