தருமபுரி, ஜூன் 22- தொழிலாளர் விரோத கொள் கைகளை ஒன்றிய அரசு கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பின் சார்பில், மாவட்ட சிறப்பு மாநாடு வியாழனன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. இதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ரேசன் முறையை பலப்படுத்தவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்ககூடாது. தொழிலா ளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். விவசாயிகளின் விளைப் பொருளுக்கு கட்டுப்படி யான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு துறைகளில் காண்ட்ராக்ட் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் இம்மாநாட்டில், நிறைவேற் றப்பட்டது. சிஐடியு மாநாட்டிற்கு, மாநில செயலாளர் சி.நாகராசன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலா வதி, ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் கே.மணி, எல்பிஎப் மாநில துணைத்தலைவர் ஜே.பழனி, மாவட்ட தலைவர் கே.அன்புமணி, மாவட்ட செயலாளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் சண்முகம், பொரு ளாளர் சென்னகேசவன், எச்எம்எஸ், பேரவை செயலாளர் முருகானந்தம், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கெ.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சி.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற் றனர்.