districts

img

ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிடு

தருமபுரி, ஜூலை 29- பொதுத்துறை நிறுவ னமான பிஎஸ்என்எல்லில் ஆட்குறைப்பு நடவடிக் கையை கைவிட வேண்டும் என் ஓய்வு பெற்றோர் அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாநாடு வலி யுறுத்தியுள்ளது.  பிஎஸ்என்எல் ஓய்வுப் பெற்றோர் அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழி யர்கள் மாவட்ட மாநாடு தருமபுரி பாரதி புரம் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலு வலக வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.கோபாலன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.பாஸ்கரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர் துவக் கவுரையாற்றினார்.  பிஎஸ்என்எல்-ஐ மேம்படுத்த 4ஜி மற்றும் 5ஜி ஆகியவற்றை வழங்கவேண்டும். ஒப் பந்த ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை  கைவிடவேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்தவேண்டும் ஆகிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் பல்வேறு சகோதர சங்கங் களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங் கினர். மாநாட்டில், ஓய்வுப்பெற்றோர் அமைப் பின் மாவட்டத் தலைவராக ஆர்.கோபாலன், மாவட்டச் செயலாளராக டி.பாஸ்கரன், பொரு ளாளராக எம்.குப்புசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவ ராக எம்.பரிதிவேல், மாவட்டச் செயலாளராக ஏ.ஜோதி, பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.