வழிப்பறி வழக்கில் 4 பேர் கைது
வழிப்பறி வழக்கில் 4 பேர் கைது சேலம், ஜூன் 27- உடையாப்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி புற வழிச்சாலை அருகே தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கிய கடனில் வசூலான ரூ.12 லட்சத்தை எடுத்துக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களான அயோத்தி யாப்பட்டணத்தைச் சேர்ந்த யுவராஜ் (41), ஆத்தூர் பகுதி யைச் சேர்ந்த குமார் (21) ஆகியோர், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக இரு சக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, உடையாப் பட்டி நூல் மில் அருகே அவர்களது வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல், அவர்களி டமிருந்த ரூ.12 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத் தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி வரையிலான 55 கி.மீ. தூர மும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், சேலம் - ராசிபுரம் வழியாக செந்தாரப்பட்டி வரை 75 கி.மீ. தூரம் என மொத்தம் 130 கிலோ மீட்டர் தொலை வுக்கு, இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த கேமரா பதிவுக ளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், பதிவான இரு சக்கர வாகன எண்கள் மற்றும் அதில் சென்றவர்களின் அடை யாளங்களை வைத்து விசாரித்த போது, பணத்தை பறித்துச் சென்றது ஆத்தூர், செந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என் பது தெரியவந்தது. தொடர்ந்து, நிதி நிறுவனத்தில் ஊழி யர்களாக பணியாற்றி வந்த செந்தாரப்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (21), சுபாஷ் (22), அவர்களின் கூட்டாளி களான சுபாஷ் என்ற கஜேந்திரன் (23), விக்னேஷ் (32) ஆகி யோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாநில அளவிலான கைப்பந்து போட்டி: ஆத்தூர் அணி சாம்பியன்
சேலம், ஜூன் 27- ஒசூரில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்ற ஆத்தூர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், சேலம் உட்பட 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மகளிர் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில், ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும், தங்கப் பதக்கத்தையும் வென்றது. வெற்றி பெற்ற ஆத்தூர் அணிக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் விழா புதனன்று நடைபெற்றது. இதில், கைப்பந்து கழகத் தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட கைப்பந்து கழகச் செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்த் தீர்வாயத்தில் 1080 மனுக்கள்
வருவாய்த் தீர்வாயத்தில் 1080 மனுக்கள் அவிநாசி, ஜூன் 27- அவிநாசியில் வருவாய்த் தீர்வாயத்தில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 1080 மனுக்களாக அளிக்கப்பட்டன. அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வா யம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கப்பட்டு, புதன்கிழமை நிறைவ டைந்தது. இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, வருமானச் சான்று உள்ளிட்ட 1080 மனுக்கள் பெறப்பட்டது. இதில் வருமானம், இறப்பிடம், முதல் பட்டதாரி, சாதிச் சான்றி தழ் உள்ளிட்ட 37 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா தலைமை வகித்தார். அவி நாசி வட்டாட்சியர் மோகனன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெகநாதன், மண்டல துணை வட்டாட்சியர் சாந்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அழகரசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.25 கோடி கடன் பெற்றவர் காவல் நிலைத்தில் தஞ்சம்
ரூ.25 கோடி கடன் பெற்றவர் காவல் நிலைத்தில் தஞ்சம் அவிநாசி, ஜூன் 27- நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பல்வேறு தரப்பினரிடம் ரூ.25 கோடி கடன் பெற்றவர், காவல் நிலையத்தில் பாதுகாப் புக் கோரி தஞ்சமடைந்துள்ளார். அவிநாசி காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் மகன் சங்கர்(33). இவர் அவிநாசி அருகே நாதம்பாளையத் தில் தான் நடத்தி வரும் நிறுவனத்தின் பெயரில் பல்வேறு தரப் பினரிடம் ரூ.25 கோடிக்கும் மேல் கடன் பெற்று, வட்டி தரா மல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர் கள் கேட்க வருவதை அறிந்த சங்கர் அவிநாசி காவல் நிலை யத்தில் புதன்கிழமை இரவு பாதுகாப்புக் கோரி தஞ்சமடைந் தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் கடன் கொடுத்தவர்கள், சங்கர் மீது புகார் அளித்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் உதவி
பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் உதவி திருப்பூர், ஜூன் 27- இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக சாத்திய கூறுள்ள சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத் துக்கு மிகாமலும், 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவ ராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறுவர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் விண்ணப் பப் படிவங்களை பூர்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களில் இணைப் பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.
ஜெய்வாபாய் பள்ளி சுயநிதி பிரிவுக்கு ஆசிரியர்கள்: அரசு சிறப்பு அனுமதி வழங்க கோரிக்கை
ஜெய்வாபாய் பள்ளி சுயநிதி பிரிவுக்கு ஆசிரியர்கள்: அரசு சிறப்பு அனுமதி வழங்க கோரிக்கை திருப்பூர், ஜூன் 27 - திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நி லைப் பள்ளியில் சுயநிதி பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமித்து ஊதியம் வழங்க, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நன் கொடை வசூலித்துக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கும் படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நி லைப்பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வரும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஆ.ஈசுவரன், தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதா வது: தமிழகத்தின் அதிகமான பெண்கள் பயிலும் முக்கியமான தொரு பள்ளியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி இருக்கிறது. கடந்த 2009- 10ஆம் ஆண்டில் 7300 மாணவிகள் பள்ளியில் கல்வி கற்றனர். அரசு சார்பில் 85 ஆசிரியைகள் பணி புரிந்தனர். ஆங்கிலம் மற்றும் தமிழ் சுயநிதிப் பிரிவுகளில் 69 ஆசிரியைகளும், 10 பிற ஊழியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டு, மாணவிகள் கல்வி பாதிக்காமல் பார்த்துக் கொண்டோம். இப்பள்ளி வளர்ச்சியில் மாநில அரசு பல்வேறு பணிகளை கடந்த காலங்களிலும், தற்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1ல் 1255 மாணவிகளும், பிளஸ் 2 வில் 1191 மாணவிகளும் கல்வி பயின்றனர். இதில் முறையே 93 மற்றும் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மேல்நிலைக் கல்வியில் 17 பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் சுமார் 2500 மாணவிகள் ஆண்டுதோறும் கல்வி பயில்கிறார்கள். இதில் 17 பாடப் பிரிவு களில் 6 பாடப்பிரிவுகள் சுயநிதி முறையில் 1993 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி கற்க இடமில்லை என்று சொல் லாமல் அனைவரையும் சேர்த்து, நன்கொடை மூலம் இந்த சுய நிதி வகுப்புகளுக்கான ஆசிரியர்களை நியமித்து பள்ளி நிர்வா கமும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் எவ்விதமான நன்கொடைகளும் வாங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் கடந்த 2 கல்வி ஆண்டுகளாக சுயநிதிப் பிரிவில் பாடம் நடத்தும் 24 ஆசிரியைகளும், பிற காலி பணியிடத்தில் உள்ள 20 ஆசிரியர்கள் என மொத்தம் 44 ஆசிரியர்களுக் கும் மாதந்தோறும் சம்பளம் கொடுக்க ரூ. 5 லட்சம் வரை தேவைப்படுகிறது. திருப்பூரில் உள்ள கல்விக் கொடையா ளர்கள் உதவுகிறார்கள். ஆனால் அதேசமயம் தொடர்ந்து பொருளாதார ரீதியில் உதவியை பெற முடியாத நிலை யில், அந்த ஆசிரியர்களை பள்ளியை விட்டு நிறுத்தும் நெருக் கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சுயநிதிப் பிரிவுகளில் கல்வி பயிலும், ஆயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். எனவே பெற்றோர்களிடம் நன்கொடை பெற்று மீண்டும் நடத் திட, பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கோ அல்லது பள்ளியின் மேலாண்மைக் குழுவுக்கோ சிறப்பு அனுமதி அளிக்க தமிழ் நாடு முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். வசூலிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரசீதும், ஆண்டு முடிந்தவுடன் பட்டயக் கணக்க ரால் கணக்கு பார்க்கப்பட்டு, அதனுடைய அறிக்கையை கல் வித்துறை வசம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த தீர்மானம்
திருப்பூர், ஜூன் 27- கரைப்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதார ணக் கூட்டம் புதனன்று ஒன்றியக் குழு தலை வர் தேன்மொழி தலைமை நடைபெற்றது. இதில், கரைப்புதூரில் உள்ள அரசு நடுநி லைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பள்ளிக் கல்வித் துறையை கேட்டுக் கொள்வது, அருள்புரம் - உப்பிலி பாளையம் சாலையை காலதாமதமின்றி உட னடியாக அளவீடு செய்து தர வருவாய்த் துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை ஆய்வா ளர் லோகநாதன், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள் ளது. குளோரினேசன் செய்யும் தண்ணீரை பொது மக்கள் தவிர்க்கின்றனர். இது குறித்து ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், மாவட்டக் கவுன்சி லர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஒன்றிய ஆணையர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு
திருப்பூர், ஜூன் 27- ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெ டுப்பு பணி தொடங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதி யில் உள்ள 34 சுற்றுகளில் கோடைகால வனவி லங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர் கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற் றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தட யங்கள் குறித்து பதிவு செய்யப்படும். அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வன விலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பற வைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்கு கள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித் தனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திருப்பூர், ஜூன் 27- திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கள் தொடர்ந்து புதுப்பித்து, எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, மாற்றுத் திற னாளிகளுக்கு ரூ.600, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.300, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மாற்றுத் திறனாளிக ளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிக ளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படு கிறது. இந்த உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு உச்ச வரம்பு இல்லை. 45 வயதுக்கு மேல் சுய சான்று வழங்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏது மில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழ கத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்த வராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில் லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூர கல்வி மற்றும் அஞ்சலக வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உத வித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவல கப் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய வர்கள் உடனடியாக படிவங்களை பெற்று உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவித்துள் ளார்.
கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம்
கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம் கோவை, ஜூன் 27- தொண்டாமுத்தூர் பகுதியில் பெய்த கனமழையால் குடி யிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் வீடுகளிலி ருந்து வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி யுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறத. இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டா முத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழ னன்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை திருவிக நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இத னால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் பள்ளிக்கு செல் லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து உள் ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் அப்பகுதி வாசி கள், வழக்கமாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனடியாக மோட்டார் மூலம் மழை நீரை அகற் றும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை யாரும் வராத நிலையில் தொற்று அபாயம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு, துரித கதியில் செயல்பட்டு மழை நீரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
192 மது பாட்டில்கள் பறிமுதல்
192 மது பாட்டில்கள் பறிமுதல் உதகை, ஜூன் 27- காரில் சட்டவிரோதமாக 192 மது பாட்டில்களை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உதகை மத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் புதனன்று இரவு உதகை மத்திய பேருந்து நிலையம் மற்றும் மின் வாரிய அலுவலக ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசா ரணை மேற்கொண்டதில், காருக்குள் இருந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து, காரை சோதனை செய்த போது அதில் சட்டவிரோதமாக ஒரே சமயத்தில் அதிக அளவு மது வாங்கி, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. மேலும், விசாரணையில், இவர் உதகை, எச்பிஎப் இந்து நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (51) என்பதும் குத்தகைக்கு காட்டேஜ் எடுத்து நடத்தி வருவ தும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 192 மது பாட்டில்கள் மற்றும் காரை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட புகையிலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை ஈரோடு, ஜூன் 27- தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற் பனை செய்தால், கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து மற்றும் அபராதம் விதிகப்படுவதோடு, கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அ ராஜகோபால் சுன்காரா வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினரோடு ஒருங்கிணைந்து 5181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24 லட்சத்து 17 ஆயிரத்து 630 மதிப்பிலான சுமார் 2 ஆயிரத்து 822.33 கிலோ புகை யிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதில், 1905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூல மாக அழிக்கப்பட்டது. எஞ்சியுள்ள புகைப்பொருட்கள் காவல் துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேற்படி, 438 பொருட்களின் விற்பனையாளர்கள் மீது ரூ.69 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிய ரின் உத்தரவின்படி 438 கடைகளும் மூடப்பட்டுள்ளது. அதில், முதல் முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறையாக தடைசெய் யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்க ளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமா னது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் தரம் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். தொடர்ந்து, விற்பனை செய் வது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவு பாது காப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படு வதோடு, கடையினை நிரந்தரமாக மூடிட உத்தரவிடப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் திரும்ப ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படு வார்கள் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
தங்கும் விடுதி மேலாளர் மீது வழக்கு பதிவு
தங்கும் விடுதி மேலாளர் மீது வழக்கு பதிவு உதகை, ஜூன் 27- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து தக வல் தெரிவிக்காத தங்கும் விடுதி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஆண்டிற்கு சராசரியாக 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை சீசனில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வருகிறார் கள். இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீலகி ரிக்கு வந்தால், குறைந்தது 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தங்கி இருந்து பல்வேறு இடங்களையும் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்க ளில் தங்கினால் அதுகுறித்து தனியாக பதிவேடுகள் பராம ரித்து 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், உதகை படகு இல்லம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மாதம் வெளிநாட்டை சேர்ந்த சுற்று லாப் பயணிகள் உதகைக்கு வந்தனர். 2 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். ஆனால், இது குறித்து தங்கும் விடுதி நிர்வாகத்தினர் காவல் துறையின ருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து போலீசா ரின் திடீர் சோதனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கியி ருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விடுதி மேலாளர் சுப்பிரமணி என்பவர் மீது உதகை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்
உதகை, ஜூன் 27- நாட்டின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின், 16 ஆவது நினைவு தினத்தை உதகையில் அவரது கல்லறையில் மலரஞ் சலி செலுத்தப்பட்டது. ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா, 40 ஆண்டு காலம் ராணுவசேவை புரிந்தவர். இவரது பணிக்காலத்தில், ஐந்து போர்களை சந்தித்தவர். ராணுவ சேவையில் ஓய்வு பெற்று, குன்னூர்வெலிங்டனில் தனது இறுதிக்காலம் வரை வசித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உயிரிழந்தார். இவரது உடல், உத கையில் உள்ள பார்ஸி இன மக்களின் கல்ல றைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், அவரது 16 ஆவது நினைவு தினமான வியாழனன்று அவரது நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து, முப்படை அதி காரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவர் கமாண் டண்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அஞ் சலி செலுத்தினார். பாதுகாப்புபடைத் தலை வர் மற்றும் முப்படைத்தளபதிகள், ராணுவ பாதுகாப்புப் பயிற்சி கல்லூரியின் கமாண் டண்ட் சார்பாக ராணுவத்தினர் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சாய்ந்த மின் கம்பதால் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டி
கோவை, ஜூன் 27- குடியிருப்பு பகுதியில் உள்ள, மின் கம்பம் திடீரென சாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வர் நொடிப்பொழுதில் உயிர் தப்பினார். இக்காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்க ளில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 7 ஆவது தெருவில் சம்பவத் தன்று காலை திடீரென மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத் தில் வந்த வாகன ஓட்டி ஒருவர் மீது மின் கம்பி கள் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டது. வாகன ஓட்டியின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், இது குறித்து மின்வாரிய அலுவ லகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின்கம் பங்கள் சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், மின்கம்பிகள் அறுந்து இரு சக்கர வாகன ஓட்டி மீது விழும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களுக்கு இடையே மோதல்: 6 பேர் கைது
மாணவர்களுக்கு இடையே மோதல்: 6 பேர் கைது கோவை, ஜூன் 27- தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த குரும்பபா ளையம் பகுதியில் எஸ்என்எஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் வெளி யூர் மாணவர்கள் சிலர் கல்லூரி அருகே உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்ற னர். இந்நிலையில், இந்த கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் அறையில் தங்கி இருக்கும் சக மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் படிக்கும் பிரவீன் என்ப வரின் செல்போனை பறித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து பிரவீன் கல்லூரியின் முன்னாள் மாணவர் தீபக் என்பவரி டம் தெரிவித்தார். தீபக் செல்போனை பறித்த மாணவர் களை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் நேரில் வந்தால் செல்போனை தந்து விடுவதாக தெரிவித்துள்ள னர். பின்பு தீபக் அந்த மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு தனது நண்பர்களான லோகேஷ், பிரவீன் ஆகியோருடன் சென்றார். ஆனால், அவர்கள் செல்போனை திரும்பி கொடுக் காமல் தீபக், லோகேஷ், பிரவீன் ஆகிய மூன்று பேரை தாக்கிய தாகத் தெரிகிறது. இதனையடுத்து, தீபக், பிரதீப் என்பவரை தொடர்பு கொண்டு தாக்கப்பட்டதை தெரிவித்துள்ளார். இதை யடுத்து பிரதீப் தனது நண்பர்களுடன், அரிவாள், கத்தி உள் ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண் பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில், மாணவர்களை தாக்கியது கோவை கொண்டயம் பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப், வரதர யங்காபாளையம் ஜெர்மன் ராகேஷ், காபி கடை பகுதி யைச் சேர்ந்த சந்தோஷ், அன்னூர் கணேசபுரம் ராகுல், தீபக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அவதூறு பரப்பிய: இந்துமக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்கு
அவதூறு பரப்பிய: இந்துமக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்கு கோவை, ஜூன் 27- முகநூலில் திமுக குறித்து அவதூறு பரப்பிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், செல்வபுரம் தெலுங்குபாளையம் பகு தியை சேர்ந்தவர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில் குமார். இவர் தனது முகநூலில் (பேஸ்புக்) தி.மு.க.வை விமர்ச னம் செய்து பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர் பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரடைப்பால் உயிரிழந்த நிருபரின் குடும்பத்திற்கு உதவி வழங்கிட கோரிக்கை
மாரடைப்பால் உயிரிழந்த நிருபரின் குடும்பத்திற்கு உதவி வழங்கிட கோரிக்கை நாமக்கல், ஜூன் 27- மாரடைப்பால் உயிரிழந்த தனியார் செய்தி நிறுவனத்தின் நிருபரின் குடும்பத்திற்கு சட்டரீதியிலான உதவிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (37) என்பவர், ‘எம் நாடு’ என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் மாவட்ட நிருபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வியாழனன்று அதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இத னையடுத்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், உதவி அலுவலர் வடிவேல், பல்வேறு தினசரி பத்திரிகை மற் றும் செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மாரடைப்பால் உயிரி ழந்த விஜயகாந்த்க்கு நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அவருடைய மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். எனவே, தாய் மற்றும் தந்தை விஜயகாந்த்தை இழந்தும் வாடும் 5 குழந்தை களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சட்ட ரீதியான உதவிகளை செய்ய வேண்டும் என விஜயகாந் தின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை
உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நாமக்கல், ஜூன் 27- உணவுப்பொருட்களில் கலப்படம் மற்றும் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என உணவுப்பாதுகாப்புத்துறையினர் சேந்தமங்க லம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் அடுத்துள்ள சேந்தமங்கலம் தாலுகாவில் எரு மப்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் போலீசார், உள்ளாட்சி பிரதிநிதி களை இணைத்து கொண்டு சோதனை மேற்கொண்டனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கூலீப் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா என வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து, அந்த 12 கடைகளுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறையினர் அபராதமாக ரூ.3.50 லட்சம் விதித்தனர்.
சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் ஈரோடு, ஜூன் 27- ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் வரும் 30 ஆம் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. பழுதடைந்த வீடுகள் சீரமைத்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதென ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
முதியவருக்கு ரூ.1.50 லட்சம் வழங்க அஞ்சலகத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல், ஜூன் 27- சேவை குறைபாடு புரிந்த அஞ்சலகத் துறை, பாதிக்கப்பட்ட முதியவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், காடச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு மாறன் (70) என்பவர், தனது பேத்தி ஜி.கா ருண்யா என்பவருக்கு, ‘சுகன்யா சம்ரித்தி’ திட்டத்தின் கீழ், ஈரோடு, எஸ்பிபி காலனி யில் உள்ள அஞ்சலகத்தில் கடந்த 2015 மார்ச் மாதம் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். கணக்கு தொடங்கிய மாதத்திலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மாதந் தோறும் ரூ.12,500யை திருமாறன் அஞ்சல கத்தில் செலுத்தி வந்துள்ளார். கடந்த 2021 ஜூலை மாதத்தில் மூன்று மாதத்திற்கான பணத்தை கணக்கில் செலுத்த இவர் அஞ்ச லகத்திற்குச் சென்றபோது, அஞ்சலக அதி காரி பணத்தை வாங்க மறுத்ததோடு, கணக்கை முடித்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். இதற்கான காரணத்தை திருமாறன் கேட்ட போது, பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பேத்திக்காக தாத்தா ‘சுகன்யா சம்ரித்தி’ திட் டத்தின் கீழ் கணக்கை தொடங்க முடியாது என்றும், இதனால் கடிதம் கொடுத்தால் செலுத் திய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் என்றும் அஞ்சலக அதிகாரி தெரிவித்துள் ளார். அஞ்சலக அதிகாரி கட்டாயப்படுத்தி யதால், பேத்தியின் பெயரில் தொடங்கிய கணக்கை முடிக்க திருமாறன் அஞ்சலகத் துக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனைப் பெற் றுக்கொண்ட அஞ்சல் துறையினர் அவர் செலுத்திய ரூ.3,37,730க்கு மட்டும் காசோலை வழங்கியுள்ளனர். இதன்பின் பணம் செலுத் திய காலத்துக்கு வட்டி தருமாறு பலமுறை அஞ்சல் துறைக்கு திருமாறன் விண்ணப்பம் அனுப்பியும், அஞ்சல் துறையினர் வட்டி தொகையை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதியவர், கடந் தாண்டு மார்ச் மாதம் அஞ்சல் துறையினர் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அப்போது, அஞ்சல் துறை விதிகளின்படி பெற்றோர் உயிருடன் இருக் கும்போதும், குழந்தை வெளிநாட்டில் இருக் கும் போதும், ‘சுகன்யா சம்ரித்தி’ திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க முடியாது, என அஞ்சல் துறையினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர், விசார ணையில் அஞ்சல் துறையினர் சேவை குறை பாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்றனர். மேலும், முதியவர் பேத்திக்கு கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தில் பெற்றோர் உயிருடன் உள்ளனரா? குழந்தை எங்கு வசிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் அஞ்சல் துறையினரால் கேட்கப்படவில்லை. கணக்கு தொடங்க அனுமதித்த பின்னர் தவ றுதலாக விதியை மீறி கணக்கு தொடங்கப் பட்டதாக அறியப்பட்டாலும், வாடிக்கையாள ரால் செலுத்தப்பட்ட தொகைக்கு வட்டி வழங் கப்படும் என்பது வாடிக்கையாளர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும். இதனால் அஞ்சலக வாடிக்கையாளரான முதியவர் செலுத்திய அசல் தொகைக்கு வட்டி ரூ.1,00,162 மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை அஞ்சல் துறையினர் நான்கு வாரங்களுக் குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை முன்னாள் ராணுவ வீரர் கைது நாமக்கல், ஜூன் 27- திருசெங்கோடு அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ முன்னாள் வீரரை காவல் துறை யினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வார்ட் என்கிற முன்னாள் ராணுவ வீரரான இவர், ஆசிரமம் ஒன்றிலிருந்து 11, 12 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தத்தெடுத்த பெண்களிடம் ஆபாச படங்களைக் காட்டி பாலியல் சீண்ட லில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருவர், குழந்தைகள் பாதுகாப்பு மையத் துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் புகாரளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் எட்வர்ட் துரையைக் கைது செய்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.