சேலம், நவ 25- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் தாலுகா செயலாளராக எ.சுந்த ரம் தேர்வு செய்யப்பட்டார். சேலம் தாலுகா குழு 24 ஆவது மாநாடு தோழர் என்.சங்க ரய்யா மற்றும் சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில், தோழர்கள் டி.சின்ன கவுண்டர் கே.ஏ.சித்தன் நுழைவு வாயிலில் ஞாயிறன்று நடைபெற்றது. முன்னதாக, சேலம் ஆவின் பால் பண்ணை முதல் மாநாட்டு அரங்கம் வரையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்தை மாவட்ட குழு உறுப்பினர் பி. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். மூத்த தோழர் ரத்தினம் செங்கொடியை ஏற்றி வைத்தார். தாலுகா குழு உறுப்பினர் ஏ.சுந்தரம் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை தாலுகா குழு உறுப்பினர் டி.பரமேஸ்வரி முன்மொழிந் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. இளங்கோ மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி முன்மொழிந்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எ. கோவிந்தன் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சேலம் தாலுகா குழு செயலாளராக ஏ. சுந்தரம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட தாலுகா குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதில், சேலம் உருக் காலையை தனியார் மயப்படுத் தும் கொள்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை துவங்கி சேலம் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண் டும். இளம்பிள்ளை பகுதியில் ஒருங் கிணைந்த ஜவுளி பூங்காவை அமைத்து ஜவுளி தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். சேலம் ஆவின் பால் பண்ணை அமைந்திட நிலம் கொடுத்தோருக்காக கொடுக்கப்பட்ட மாற்று குடியிருப்பு இடத் திற்கு பட்டா வழங்கிட வேண்டும். கன்னங் குறிச்சி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் மேவை சண்முக ராஜா மாநாட்டை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். முடிவில், சித்தனுர் கிளை செயலாளர் எஸ்.கே.அண்ணாமலை நன்றி கூறினார்.