அவிநாசி, மார்ச். 25 – இந்தியாவில் கெட்ட ஆட்சியை தூக்கி எறிந்து நல்லாட்சி அமைப் போம் என்று நீலகிரி தொகுதியில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா கூறி னார். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி புதிய பேருந்து நிலை யத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட் டது. இதையடுத்து ஆ.ராசா பேசிய தாவது: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யிலே மூன்று முறை போட்டியிட்டு வெற் றியும் பெற்றுள்ளேன். தோல்வியும் அடைந்துள்ளேன். தற்பொழுது கிடைத்த வரவேற்பு போல், எப்பொழு தும் பார்த்ததில்லை. இன்றைக்கு பெரிய ஆபத்திலே இந்தியா இருக்கி றது, இந்தத் தேர்தல் இந்திய தேசத்தை காப்பாற்றக்கூடிய தேர்தல், இந்திய அரசியல் அமைப்பை காப்பாற்றக் கூடிய தேர்தல், இந்திய அரசியல் சட் டத்தை உருவாக்கிய காலத்தில் ஏறத் தாழ ஒரு வருட காலம் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் அம்பேத்க ரும் இன்னும் மூத்த தலைவர்கள் எல் லாம், சியாமளபிரசாத் முகர்ஜி என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவ ரும் சேர்ந்து, தேசப்பிதா காந்தியடிக ளுடைய கருத்துரையை, ஏற்று சமதர்ம நாடாக, மதசார்பற்ற நாடாக உருவாக்கினர்.. எத்தனையோ பழக்க வழக்கம், எத்த னையோ மொழி இருக்கிறது. இவை களை எல்லாம் உள்ளடக்கிய அரசி யலமைப்புச் சட்டத்திற்கு மோடி, அமித்ஷா மூலம் ஆபத்து வந்திருக்கி றது. எல்லோருக்கும் வருமான வரித் துறை, அமலாக்கத்துறை என்று ரைடு விடுகிறார்கள். ஏற்கனவே ஜார்கண்ட் மாநில முதல்வர் சிறையில் இருக்கிறார், டெல்லி முதல்வர் சிறையில் இருக்கி றார். எங்களை பணையம் வைத்தாவது தமிழகத்தை, இந்திய தேசத்தை காப் பாற்றக்கூடிய பொறுப்பு உண்டு என்று சொல்லக்கூடிய தலைவர் ஸ்டாலின். நல்லாட்சிக்காகவும் வந்திருக்கிறீர்கள், ஒரு கெட்ட ஆட்சியைத் தூக்கி எறிவ தற்காக ஆவேசத்துடன் வந்திருக்கி றீர்கள். கெட்ட ஆட்சியை அகற்றி நல் லாட்சி நடைபெற என்னை மக்கள வைக்கு அனுப்பி வையுங்கள். மும்மதங்கள் இருக்கும் அவிநா சியை போல, இந்த அமைதி இந்தியா முழுவதும் பரவ வேண்டும். கவர்னர் மாளிகையில் தொடங்கியுள்ள பிரச்சா ரம் குடியரசுத் தலைவர் மாளிகையில் முடியும் என்று ஸ்டாலின் கூறினார். எனவே இந்த அணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வ தாக ஆ.ராசா கூறினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன், க.செல்வராஜ் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பி னர் சரவணன்நம்பி, ஒன்றிய செயலா ளர்கள் பால்ராஜ், சிவப்பிரகாஷ், பழ னிச்சாமி, பேரூராட்சி தலைவர் தன லட்சுமி பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம், முத்துசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி லட்சுமணசாமி, தங்கமுத்து, மதிமுக சுப்பிரமணி, சுந் தர்ராஜ், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சண்முகம், ஆதித்தமிழர் பேரவை மணி, விடுதலைச் செல்வன், மனிதநேய மக்கள் கட்சி அபுசாலி, மக்கள் நீதி மையம் இளங்கோ, சுரேஷ், திராவிட கழகம் குமார் ராஜா, உள்ளிட்டு கூட் டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.