districts

பாப்பிரெட்டிப்பட்டியில் ஆ.மணி வாக்குசேகரிப்பு

தருமபுரி, ஏப்.6- பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.மணி பாப்பிரெட்டிப்பட்டி சட் டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப் போது அவர் பேசுகையில், தருமபுரி மாவட் டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்க ளையும் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தரு வேன். விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும்,  விவசாய கடனை ரத்து செய்யவும் நடவ டிக்கை எடுப்பேன். தருமபுரி மாவட்டத் திற்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை ஏற்ப டுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.பழனி யப்பன் தலைமை வகித்தார். இதில் ஒன் றியச் செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், வர்த்தகர் அணி மாநில துணை அமைப்பாளர் சத்ய மூர்த்தி, மகளிரணி அமைப்பாளர் கவிதா மோ கன், சிபிஎம் நிர்வாகிகள் செல்வம், முரளி,  குறளரசன், முனியப்பன், விசிக மாவட்டச் செயலாளர் சாக்கன்சர்மா, ஒன்றியச் செய லாளர் குமரன், திமுக பேரூராட்சி செய லாளர் கே.மணி, நகரச் செயலாளர் மோகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.