திருப்பூர், புப்.26- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின் னம்மாள். இவர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது திடீ ரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன் றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.