districts

img

கோவையில் பிடிபட்ட வெள்ளை நாகம்

கோவை., நவ.19- கோவையில் பிடிபட்ட வெள்ளை நாகத்தை வனத் துறையினர் பாலமலை வனப்பகுதியில் விடுவித் தனர். கோவை மாவட்டம்,  பெரியநாயக்கன்பாளை யத்தை அடுத்த நரசிம்ம நாயக்கன்பாளையம்,  ராஜேந்திரா நகரை சேர்ந் தவர் ஜெயபால். இவர் வீட்டை சுத்தம்  செய்து கொண்டிருந்தபோது, அறையில்  வெள்ளை நிறத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதை  பார்த்துள்ளார். அதன் அருகே சென்று பார்த்த போது அது பாம்பு என்பது தெரிந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்  போட்டுள்ளார். அவரது அலறல் கேட்டு வந்த  ரவிக்குமார் என்பவர், பாம்பை சாதுர்யமாக  பிடித்து, ஒரு பாட்டிலில் அடைத்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  பெரியநாயக்கன்பா ளையம் வேட்டை தடுப்பு காவலர் ராசுகுட்டி உள்ளிட்ட  வனத்துறையினர்,  பாம்பை பரிசோதனை  செய்து பாலமலை வனப் பகுதியில் விடுவித்தனர். இதுகுறித்து வனத்துறை யினர் கூறுகையில், இந்த  பாம்பு நாகபாம்பு வகையை  சேர்ந்தது. 4 அடி நீளம் கொண்ட இந்த பாம்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது சாதாரணமானது தான். நாகபாம்பு அல்பினோ  என்னும் குறைபாட்டால் வெள்ளை நிறத்தில்  காணப்படும், என்றனர். இதற்கிடையே பாம்பு வெள்ளை நிறத்தில் இருந்ததால் அதனை  பார்க்க அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குவிந் தனர்.