districts

நீலகிரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

உதகை, ஜூலை 30- நீலகிரியில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறை யான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் அரசி என்று அழைக் கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந் துள்ள சுற்றுலா தலங்களை காண அண்டை மாநிலங்களான கேரளா, கர் நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்க ளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந் தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற் றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வந்தது. இதனால் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலை யில், ஞாயிறன்று காலை முதலே வெயி லுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருகிறது. வார விடுமுறை நாளை யொட்டி, ஞாயிறன்று உதகையில் உள்ள  உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், கர்நாடக பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று தொட்டபெட்டா மலை  சிகரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட் டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப் பாக, இங்கு நிலவும் காலநிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள், அங் குள்ள இயற்கை காட்சிகளையும், அழ கிய மலைமுகடுகளையும் கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கடந்த 10 நாட்களாக உத கையில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், தற்போது நிலவுவது போன்று இதமான காலநிலை தொடர்ந் தால் இன்னும் ஏராளமான சுற்றுலா பய ணிகள் வருகை தருவார்கள் என தோட் டக்கலைத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.