districts

கோத்தகிரி: 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

உதகை, ஆக.9- கோத்தகிரி அருகே கோழிக்கழிவு ஏற்றி  வந்த லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசா யம் பிரதானமாக உள்ளது. இங்கு விளை நிலங்களை உரமிட்டு பண்படுத்துவதற்காக, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து கோழிக் கழிவு லாரிகளில் கொண்டு வருவது வழக்கம். இதேபோல், மேட்டுப்பாளையத் தில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று கோத்தகிரி வழியாக இடுஹட்டி கிராமத்திற்கு சென்று கொண்டி ருந்தது. லாரியை இடுஹட்டி பாரதி நகரைச் சேர்ந்த விஜய் (32) என்பவர் ஓட்டிச்சென் றார். அரவேனு அருகே லாரி வந்து கொண் டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விஜய் லேசான காயங்க ளுடன் உயிர் தப்பினார். அவ்வழியாக சென்ற  வாகன ஓட்டிகள் விஜயை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கோத்த கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.