திருப்பூர், ஜூலை 31 - செங்கல்பட்டில் இருந்து பீர் லோடு ஏற்றி வந்த லாரி திருப் பூர் அருகே சாலையோரமாக கலந்து விபத்துக்குள்ளானதில் பீர் பாட்டில்கள் உடைந்து சேதம் அடைந்தன. செங்கல்பட்டில் உள்ள மதுபானம் கம்பெனியிலிருந்து கோவையில் சப்ளை செய்வதற்காக பீர் பாட்டில்களை ஏற் றிய லாரி ஈரோடு , செங்கப்பள்ளி வழியாக கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. திங்க ளன்று காலை செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளை யம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் ஓர மாக இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் பெட்டிகளில் இருந்த 25 ஆயிரத்து 200 பீர் பாட்டில்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஊத்துக் குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.