districts

img

அய்யம்பாளையத்தில் விவசாயத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி

திருப்பூர், ஜூலை 5 - தமிழகத்தில் 1972ஆம் ஆண்டு மின்  கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து விவசாயிகள், போராளி நாராயணசாமி நாயுடு தலை மையில் வீரஞ்செறிந்த போராட்டம் நடத் தினர். இப்போராட்டத்தில் மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் 64 விவசாயிகள் காவல் துறை துப்பாக்கி சூட்டில் உயிரி ழந்தனர். இதில் பல்லடம் அருகே தெற்கு அய்யம்பாளையத்தில் விவசா யிகள்  முத்துக்குமாரசுவாமி, ஏ.ஆர்.சுப்பையன் ஆகிய இருவர் காவல் துறை யின் துப்பாக்கிச் சூட்டுக்கு வீர மரணம்  அடைந்தனர். அவர்களது 52 ஆம் ஆண்டு நினைவு  தினமான வெள்ளியன்று, அய்யம்பா ளையத்தில் உள்ள அவர்களது நினைவு  ஸ்தூபிக்கு பல்வேறு விவசாய அமைப் பினர் வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மாவட்டச் செயலாளர் ஆர். குமார், மாவட்டத் துணைச் செயலாளர்  எஸ்.வெங்கடாசலம், கோவை மாவட் டத் துணைச் செயலாளர் ரவீந்திரன், ஒன் றிய பொருளாளர் லோகநாதன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் ஆர். பாலன் உள்ளிட்டு திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர். பல்லடம் ஒன் றியத் தலைவர் கே.வி.சுப்பிரமணி நன்றி  கூறினார். இந்நிகழ்வில் தியாகிகள் குடும்பத் தாருக்கு கதராடை அணிவித்து புத்த கம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.