உதகை, ஜூலை 23- ஊட்டி மஞ்சூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்க ளாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 91 சதவீதத்திற்கும் அதிகமாக இதுவரை மழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக நீலகிரி, கோவை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்ப தால் நாளை வரை (திங்கட்கிழமை) நீலகிரி உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி வியாழக்கிழமை முதல் பர்லி யாரில் இருந்து ஊட்டி எல்லநல்லி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல் நடுவட்டம், மசினகுடி, கீர்த்தி உள் ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் னர் பெய்த மழை காரணமாக ஊட்டி சுற்றுவட் டார பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்பட் டது. இதனால் ஊட்டி -மஞ்சூர் சாலையில் லவ் டேல் டி.எப்.எல் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. இந்த மரம் எதிரில் இருந்த டிரான்ஸ்பார் மர் மற்றும் கடை மீதும் சேர்ந்து விழுந்தது. இத னால் அந்த பகுதியில் உள்ள பத்துக்கு மேற் பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு துண் டிக்கப்பட்டது. இதன் பின்னர் மின்சாரத் துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று டிரான்ஸ் பார்மரை சரி செய்து மின்வினியோக பணி களை மேற்கொண்டனர். இதேபோல் சாலையில் மரம் விழுந்த தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றி னர். இதேபோல் அந்த சாலையில் மேலும் 2 இடங்களில் மரம் விழுந்தது. அவற்றை யும் தீயணைப்பு துறையினர் அகற்றினர். இதற்கிடையே மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. அப்பர் பவானி அணை நீர்மட்டம் 200 அடியை தாண்டி இந்த ஆண்டு நிரம்பும் தருவாயில் உள்ளது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகு திகளிலும் ஆங்காங்கே மழை பெய்வதால் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.