திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூச்செடியை தாக்கி அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளாண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் ஆராய்ச்சி வல்லுனர்களிடம் கூறி வயலுக்கு வரவழைத்து உரிய ஆய்வு செய்யப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத்துறை துணை இயக்குனர் உமா தெரிவித்தார்.இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.