districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இன்று மின்தடை

கோவை, ஜன.9- கோவை மாவட்டம், அவி நாசி பகுதியில் மின்துறை யின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செவ் வாயன்று (இன்று) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், பழங் கரை, ராக்கியபாளையம், அவிநாசி டவுன், கே.கே. புதூர், சுண்டக்காம்பாளை யம், வேட்டுவபாளையம் மற் றும் கந்தம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்ப டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானை

தலைதெறிக்க ஓடிய மக்கள்

கோவை, ஜன.9- கோவை, கணுவாய் பகுதியில் குடியி ருப்புக்குள் புகுந்த ஒற்றை யானையை கண்டு அப்பகுதி மக்கள் தலைதெறிக்க ஓடிய  வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  கோவை மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி ஏராளமான வனவிலங்குகள் உள் ளன. இதன் வழித்தடத்தை மறித்து பல்வேறு நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியும், மின்வேலிகள் அமைத்திருப்பது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந் நிலையில், கோவை, பெரிய தடாகம் வனப் பகுதியில், தற்போது 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசிய மின்றி வெளியே வர வேண்டாம் என வனத் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள் ளது.  இந்நிலையில், மருதமலை வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை வடவள்ளி கணுவாய் சாலையில் குடி யிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் தனி யார் திருமண மண்டபம் அருகே உள்ள  தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இது குறித்து வனத்துறையின ருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்த தைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையி னர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே குடியிருப்பு பகு திக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதி விட்டுள்ளனர்.  இந்நிலையில், கணுவாய் பிரதான சாலை யில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் வந்த தால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடி னர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டு யானையை வனப்பகு திக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் காட்சிகளும், பொதுமக்கள் தலைதெறிக்க ஓடுகிற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அதேசமயம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகளை விரைந்து விரட்ட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு வது குறிப்பிடத்தக்கது.

பாம்பு கடித்து கரும்பு வெட்டு தொழிலாளி பலி

நாமக்கல், ஜன.9- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (22). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட் டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, கரும்பு சருகுக் குள் இருந்த கட்டுவிரியின் பாம்பு இவரை கடித்துள்ளது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேல் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

கணவரின் கொடுமை தாங்காமல் இளம்பெண் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், ஜன. 9 - திருப்பூரில் கணவரின் கொடுமை தாங்காமல் இளம் பெண்  ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்கு ளிக்க முயற்சி செய்தார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர்  மஞ்சுளா. இவரது மகள் சௌந்தர்யா (24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான, கோவை மாவட் டத்தை சேர்ந்த மனோகர் (40) என்ற கட்டிட தொழிலாளிக்கு சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனிடையே குடிக்கு அடிமையான மனோகர் திரும ணம் ஆனது முதல் இரண்டு மாதங்களாக சௌந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து  நியாயம் கேட்கச் சென்ற சௌந்தர்யாவின் தாயார், மஞ்சுளா வையும் அவர் தாக்கியுள்ளார்.  இதையடுத்து பாதிக்கப்பட்ட மஞ்சுளா, மகள் சௌந் தர்யா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத் தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள் ளனர். தொடர்ந்து காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்த  நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம்  கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல்  அடைந்த சௌந்தர்யா திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி  தீக் குளிக்க முயற்சி செய்தார். அப்போது அப்பகுதியில் பாது காப்பு பணியில் இருந்த போலீசார் இதைக் கவனித்து, சௌந் தர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற னர். திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம் பெண்  ஒருவர் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் துணை ஆணையரை சந்திக்க  பாத்திர தொழிற்சங்கங்கள் முடிவு

திருப்பூர், ஜன.9- திருப்பூர் வட்டார எவர்சில்வர் முழுக்கூலி பட்டறைதாரர் களுக்கும், திருப்பூர் பாத்திர வியாபாரிகள் சங்கத்திற்கும்  அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கூலி உயர்வு தொடர் பாக கடிதம் கொடுத்தும் பதில் வராத காரணத்தால் தொழி லாளர் துணை ஆணையரை விரைவில் சந்திப்பது என்று  அனைத்து பாத்திரத் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள் ளன. சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வா கிகள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

தில்லி வியாபாரியிடம் ரூ.1.05 கோடி மோசடி  வெள்ளகோவிலில் தில்லி போலீஸ் முகாம்

திருப்பூர், ஜன. 9 - தில்லியைச் சேர்ந்த வியாபாரியிடம் ரூ.1 கோடியே 5  லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வெள்ளகோவில் வியா பாரியை விசாரிப்பதற்கு தில்லி போலீசார் இங்கு வந்துள்ள னர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், காமராஜபுரம் பகு தியைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் மனைவி திலகவதி  (38). இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தில்லி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஷர்மா(46) என்ற வியாபாரியிடம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த  வகையில் சரவணன் தெரிவிக்கும் முகவரிக்கு புருஷோத்த மன் ஷர்மா துணிகளை அனுப்பி வந்தனர். அதற்குரிய பணத்தை சரவணன் தில்லி வியாபாரிக்கு அவ்வப்போது கட்டி வந்துள்ளார். சரவணன் தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற் பட்ட நிறுவனங்களுக்கு, தில்லி வியாபாரி மூலம் சப்ளை  செய்துள்ளார். இந்நிலையில் சரவணன் ரூ.1 கோடியே 5 லட்சம் பணத்தை  தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2019ஆம் வருடம் 30 லட்சம் ரூபாய்க்கு கரூர்  வைசியா வங்கி காசோலையை தந்துள்ளார். ஆனால் பணம்  இல்லாததால் காசோலை திரும்பப்பட்டது. தில்லி வியாபாரி  புருஷோத்தமன் ஷர்மா தான் துணி அனுப்பிய நிறுவனத்தின ரிடம் விசாரித்துள்ளார். பணத்தை சரவணன் பெற்றுக் கொண் டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வருட கணக்கில் பணத்தை தராமல் மோசடி செய்து வருவதாக டெல்லி வியா பாரி புருஷோத்தமன் ஷர்மா, தில்லி காந்திநகர் போலீஸ்  நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். தில்லி, காந்திநகர் காவல் நிலைய எஸ்.ஐ விவேக்குமார் தலை மையில் நான்கு போலீசார் வெள்ளக்கோவில் வந்தனர்.  பின்பு வெள்ளக்கோவில் போலீசார் உதவியுடன் சரவணன்  வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வீடு பூட்டப்பட்டிருந் தது. சரவணன் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சரவணன் வீட்டில் தேடப்படும் குற்ற வாளி என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தில்லி போலீசார் சர வணனை கைது செய்ய வெள்ளக்கோவிலில் முகாமிட்டுள் ளனர்.

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த  பணம் பட்டப்பகலில் திருட்டு

திருப்பூர், ஜன. 9 - திருப்பூர் செல்வராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (79). இவர் எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள  தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு இருசக்கர வாகனத் தில் சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு  சென்ற ராமலிங்கம் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது வண்டியில் வைத்திருந்த பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அதில் இளைஞர் ஒருவர் வாகனத்தின் இருக்கையை திறந்து  உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.5000 பணம் மற்றும் வங்கி ஆவ ணங்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது தெரியவந் தது.

இன்றைய கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 9 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம்,  கோடங்கிபாளையம் கிராமத்தில் அமைக்க வுள்ள கவிதா கல்குவாரி பற்றி செவ்வாயன்று  (இன்று) நடத்த திட்டமிட்டுள்ள கருத்துக் கேட் புக் கூட்டத்தை ரத்து செய்யும்படி சட்டவி ரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர்  கூறியுள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யருக்கு சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு  இயக்கத்தினர் அனுப்பியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில், கோடங்கிபா ளையம் கிராமத்தில், புல எண்: 27/2டி &  2ஈ ஆகியவற்றில் 2.65 ஹெக்டேர் (சுமார்  06.50 ஏக்கர்) பரப்பளவில் கவிதா கல் குவாரி  அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம்   செவ்வாயன்று (இன்று) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களை வைத்து  ஆய்வறிக்கை என்று தெரிவித்து நடத்தப்ப டும், இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை  ரத்து செய்ய வேண்டும். காற்று, மண், நீர், ஒலி  ஆகியவற்றை ஆய்வு செய்ததாக முழுக்க  போலியான ஆவணங்களை வைத்து இருப் பதால், இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண் டும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு  காலமாக, நாமக்கல் ஒமேகா லேபரட்டரிஸ்   என்ற நிறுவனம் பெயரில் கொடுத்துள்ள முக வரியில் அந்த நிறுவனம் இயக்கத்திலும்  இல்லை, அங்கு ஆய்வுக் கூடமும் இல்லை.  இப்படி இல்லாத, இயங்காத போலி நிறுவ னமான நாமக்கல் ஒமேகா லேபரட்டரிஸ் நிறு வனப் பெயரில்தான் தற்போது 38 பக்க முடிவு கள் அடிப்படையில் அறிக்கை கொடுக்கப் பட்டு உள்ளது. எனவே மோசடியான ஆவணங்களை வைத்த இந்த அறிக்கையின் மீது கருத்துக்  கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது.சட்டத்தின்  அடிப்படையில், உண்மையான ஆவணங் கள் அடிப்படையில், கவிதா குவாரி கருத்து  கேட்பு கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்வ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தினால், சட்ட ரீதியான நீதிமன்ற நடவ டிக்கைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு இலவச வேட்டி,  சேலை முழு அளவு வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜன. 9 - பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் படும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து நியாய விலை கடைக ளுக்கும் முழுமையான அளவு இலவச  வேட்டி சேலைகளை வழங்குமாறு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்  சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள் ளது.  இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட  கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் தலை வர் பி கௌதமன் திருப்பூர் மாவட்ட ஆட் சியருக்கும், மாவட்ட வழங்கல் அலுவல ருக்கும் கொடுத்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது:  திருப்பூர் மாவட்டத்தில் செயல்ப டும் நியாய விலை கடைகளுக்கு 25 சதவீ தம் மட்டுமே வேட்டி, சேலை வழங்கப் பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக்  கடைகளுக்கும் 100 சதவிகிதம் வேட்டி,  சேலை ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும்.  மேலும் இம்மாத ரேஷன் பொருட் கள் பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் 85 சதவீதம் மட்டுமே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களும் 100 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களே பொறுப்பேற்று வேட்டி, சேலை வழங்க  வேண்டும், மேலும் பிஎச்எச் குடும்ப  அட்டைகளுக்கு, குடும்ப அட்டைதாரர் களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு,   இரண்டு முறை பில் போடுவதை தவிர்த்து பிஓஎஸ் இயந்திரத்தில், ஒரே  முறையில் பில் போட ஏதுவாக மாற்றி யமைக்க வேண்டும் எனவும் திருப்பூர்  மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம்  சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கௌத மன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவிநாசி,ஜன.9- ஆளுநர் ரவியினை கண்டித்து அவிநாசி பேருந்து நிலை யம் அருகில், தலித் விடுதலைக் கட்சியினர் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆளுநர் ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத் துக்களை தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டை தமிழகம் என்று கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் தொடங்கியது, இதில் ஆளுநர்  உரையில், பெரியார், அம்பேத்கர், கலைஞர், திராவிட மாடல்  போன்ற பெயர்களை விடுபட்டு உரையினை வாசித்துள் ளார். இதற்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதைதொடர்ந்து ஆளுநர்  பாதியிலேயே வெளியேறினார். இது போன்ற நடவடிக்கைக ளில் ஈடுபட்டு வரும் ஆளுநரை கண்டித்து தலித் விடுதலைக்  கட்சியினர் அவிநாசி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நூலகருக்குப் பாராட்டு

உடுமலை, ஜன-9- திருப்பூர் மாவட்டம், உடுமலை முழுநேர  கிளை நூலகம் எண் இரண்டில் கொரோனா  காலத்தில் சிறப்பாக பணியாற்றி, பணி  நிறைவு பெற்ற வீ. கணேசனுக்கு உடுமலை  சாதனை மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார் பில் பாராட்டு விழா நடைபெற்றது.  ஓவிய ஆசிரியர் மதன் குமார் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஓவியர் உடு மலை ஸ்ரீ முன்னிலை வகித்தார். உடுமலை  சாதனைப் பெண்கள் பொறுப்பாளரும்  திரைப்படப் பாடல் ஆசிரியருமான கவிஞர்  சுரா, உடுமலையில்  நூலகத்தின் மூலம் பல் வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக சேவை கள் செய்து சிறந்த நூலகராகச் செயல்பட்டுப்  பணி நிறைவு பெற்ற நூலகர் வீ. கணேசனை பாராட்டிப் மடல் வழங்கினார்.  மேலும், கொரோனா காலத்தில் சிறப் பாகச் செயல்பட்டு பள்ளி, கல்லூரி மாண வர்கள் பயன் பெரும் வகையில் போட்டித் தேர் வுகள் நடத்த வழிநடத்தியதைப் பாராட்டும்  வகையிலும், தொடர்ந்து பெண்கள் மற்றும்  மாணவர்கள் தன்னம்பிக்கை பெறும் வகை யில் இலவச சிலம்பம் களரி வகுப்புகளைத்  தகுந்த ஆசிரியரைக் கொண்டு நடத்தியதைப்  பாராட்டியும் இந்த மடல் வழங்கப்பட்டது.  நிறைவாகப் பேராசிரியர் கண்டி முத்து நன்றி கூறினார். பணி நிறைவு நூலகர் கணேசன்  ஏற்புரையாற்றினார்.

அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி  போராட்டம்

திருப்பூர், ஜன. 9 - திருப்பூர் மாவட்டம், அலகு மலையில் ஜல்லிக்கட்டு  போட்டி நடத்த அனுமதி கேட்டு ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு  பேரவை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் கடந்த நான்கு வரு டங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின் றது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற் கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அலகுமலை யில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதன் காரணமாக விவ சாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு நடத்த  ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 6 மாத   காலத்தில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தர விட்டது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகள் போலவே  இந்த ஆண்டும் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் ஏறு தழு வுதல் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் திங்களன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

திருப்பூர், ஜன.9- அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திங்களன்று  திருப் பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமி ருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை,  புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி  வேண்டி உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 404  மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னி லையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக் கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார் பில் ரூ.1,35,490 மதிப்பீட்டில் 10 பார்வையற்ற மற்றும் செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசியை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  அ.லட்சுமணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  அம்பாயிரநாதன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.7 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜன.9- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.7 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற ஏலத்தில்,  201 மூட்டைகள் வந்திருந் தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7, 700 முதல் ரூ.8,140 வரையி லும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.7,300 முதல் ரூ.7, 600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,150 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 6 வியா பாரிகள், 33 விவசாயிகள் பங் கேற்றனர்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:49.55/60அடி  நீர்வரத்து:824கன அடி வெளியேற்றம்:969கன அடி அமராவதி அணை  நீர்மட்டம்: 86.42/90அடி. நீர்வரத்து:144கனஅடி வெளியேற்றம்:451கன அடி

ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்

சிவகங்கையைச் சேர்ந்தவர் கைது

கோவை, ஜன.9- கோவை விமான நிலையத்திற்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏர் அரேபியா விமானத்தில் ஞாயிறன்று கோவை வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், 3.54 கிலோ எடை கொண்ட ரூ.2.05 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை காவல் துறையினர் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சிவகங்கையைச் சேர்ந்த முத்துகுமார் (37) என்பதும், தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

சமூக விரோத கூடமாகும் மோட்டல்கள்

நீண்ட தூர புற நகர் போக்குவரத்தில் ஒரு இரவில் தங்குவதற்காக பல்வேறு போக்குவரத்து வழிகளில் அமைக்கப்படு வது மோட்டல்கள் எனப்படும். புற  நகர் பயணிகளுக்காக இது வடிவமைக் கப்பட்டது. இது மற்ற விடுதிகளை விட மலிவான விலையில் கிடைக்கும். இதன் அருகில், எரிவாயு நிலையங்கள், சேவை மையங்கள் மற்றும் பாதுகாப்புடன் பார்க் கிங் வசதிகள் இருக்க வேண்டும் என்பது விதியாகும். இதில் பொதுவாக குறைந் தது 12 ஒற்றை அல்லது இரட்டை அறை கள் இருக்கும்.  இவ்வாறு ஒரு கட்டுமானம் ஈரோடு அருகே சுமார் 8 தொலைவில் நசியனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை (எண் 544) அமைந்துள்ளது. இவை அமைக் கப்பட்டு சுமார் 40 ஆண்டுகளை கடந்தி ருக்கும். எந்த பராமரிப்பும் இன்றி பழுத டைந்துள்ள இந்த மோட்டல் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி யுள்ளது என்பதே வேதனை. கட்டுமானங்கள் பராமரிப்பில்லாம லும், பயன்பாடின்றியும் காட்சியளிக்கி றது. இதனால் மதுப்பிரியர்களின் மைய மாகவும், சமூக விரோதிகளின் கூடார மாகவும் மாறியுள்ளது. ஆகவே உரிய முறையில் பராமரித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சக்திவேல்

நீலகிரியில் கடந்தாண்டு 7,474 வாகனங்கள் விற்பனை

உதகை, ஜன.9- நீலகிரி மாவட்டத்தில் கடந் தாண்டு (2022) 7 ஆயிரத்து 474 வாக னங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்து உள்ளார். தொடக்க காலங்களில் கார் மற் றும் இருசக்கர வாகனங்கள் அந்தஸ் தாக பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவை அத்தியா வசிய தேவையாகிவிட்டது. இதனால் வீட்டுக்கு ஒரு வாகனம் என்று இருந்த நிலையில், தற்போது ஒரு நபருக்கு ஒரு வாகனம் என்ற நிலை ஏற்பட்டு  வருகிறது. இதனால் வருடந்தோறும் வாகனங்கள் வாங்குவோரின் எண் ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப் படி மாநிலத்தில் மொத்த வாகனங் களின் எண்ணிக்கை மூன்றரை கோடியை நெருங்கி வருகிறது. இத னால் சாலைகளில் வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது. நீலகி ரியை பொறுத்தவரையில், அதிக ரித்து வரும் வாகன எண்ணிக்கை மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர் வருகை காரணமாக சாலையில் காலை, மாலை நேரங்களில் எப்போ தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. ஆனாலும் பொதுமக்களி டையே வாகன மோகம் அதிகரித்து வருகிறது. இதன்படி நீலகிரி மாவட் டத்தில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 474 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள் ளன. இதுகுறித்து நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாக ராஜன் கூறுகையில், நீலகிரியை பொறுத்தவரை சிறிய மாவட்டம் என் பதால், ஆண்டுதோறும் 10 ஆயிரத் திற்கும் குறைவான வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டு வருகி றது. இதன்படி கடந்த 2021 ஆம்  ஆண்டு 6 ஆயிரத்து 747 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலை யில், கடந்த ஆண்டு இந்த எண் ணிக்கை 7 ஆயிரத்து 474 ஆக அதிக ரித்துள்ளது. இதில், குறிப்பாக 2021 ஆம் ஆண்டு விவசாயிகள், விவசாய பயன்பாட்டுக்கான டிராக்டர் 76 வாக னங்கள் பதிவு செய்யப்பட்ட நிலை யில், கடந்த ஆண்டு 149 வாகனங்க ளாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கள் மற்றும் கருவிகள் பயன்பாடு அதிகரித்திருப்பதை காணலாம். மேலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 சதவிகிதம் பேர் கோவை உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களில் இருப்பதால் பெரும்பாலான வாக னங்கள் அங்கும் பதிவு செய்யப்படு கிறது. கொரோனா பரவல் முடிந்து தற்போது பொருளாதாரம் சற்று  உயர்ந்து வருவதால், இந்த ஆண் டில் இதைவிட வாகனங்களின் எண் ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

மது போதையில் தகராறு: தொழிலாளி பலி

ஈரோடு, ஜன.9- ஈரோடு மாநகரில் உள்ள கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர் 4ஆவது வீதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன் (62). கட்டு மான தொழிலாளியான இவர் மனைவி, மகனை இழந்தவர். அதேபோல கருங்கல்பாளையம், பச்சையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளியான லோகு (34). இவர்கள் இருவரும் சனியன்று இரவு காதர் மொய்தின் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு தாக்குதலாக மாறி யதில் காதர் மொய்தீன் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள் ளது. இதனையடுத்து லோகு அங்கிருந்து சென்று விட்ட தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று காதர் மொய்தீன் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகு றித்த தகவலின் பேரில் கருங்கல்பாளையம் காவல் துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வந்த பெண்ணுக்கு கொரோனா

கோவை, ஜன.9- பல நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணி களுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய் யப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் கட்டாய மாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து கோவை  வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர் களில் சேலத்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியா னது. இந்நிலையில், ஷார்ஜாவிலிருந்து கடந்த ஜன.7 ஆம்  தேதியன்று கோவை வந்த விமான பயணிகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில், பீள மேட்டை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோத னைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப் பட்டது. அதில் எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும். அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மின்ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்?

சென்னை, ஜன.9 - மின்வாரிய தொழிற் சங்கங்களுடன் நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கடந்தும் இதற்கான பேச்சுவார்த்தையை நிர்வாகம் முறையாக தொடங்காமல் உள்ளது. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளை, வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறையில் செய்யக் கூடாது, வாரிய சுற்றறிக்கை பிபி-2ஐ ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு ஒரே மாதிரி பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து தொழிலா ளர் இணை ஆணையர் முன்னிலையில் 2 முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் திங்களன்று (ஜன.9) தொழிற்சங்கங்களுடன் வாரிய நிதிச் செயலாளர் சுந்தரவதனம் மற்றும் அரசு நிர்ணயித்த ஐஏஎஸ் அதிகாரிகள் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 7.30 மணி வரை உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி இன்றைய தினம் வேலை நிறுத்தம் நடைபெறலாம் என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடக்க இருப்பவை

தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஜனநாயக மரபை சீர்குலைத்த தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்: டாடாபாத், பவர் ஹவுஸ், கோவை. நாள்: 10.1.2023 செவ்வாய்க்கிழமை. நேரம்: மாலை 5 மணி ஏற்பாடு:  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிய, பெரியாரிய,  அம்பேத்கரிய அமைப்புகள்