districts

img

வால்பாறை அருகே வனத்தில் திடீர் தீ விபத்து

கோவை மாவட்டம் வால்பறை அருகே வனத்தில் திடீர் விபத்து ஏற்பட்டதால் சுமார் சுமார் 7 ஏக்கர் தேயிலை, செடி, மரங்கள் எரிந்து சாம்பலாகியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீரின்றி, வறண்டு காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி மரங்கள் காய்ந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே   உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள்  உடனடியாக எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சுமார் 7 ஏக்கர் தேயிலை, செடி, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது.

மேலும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால், வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளன.