மகளுக்கு நல்ல பால் வேண் டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஒருவர் நாட்டு மாட்டுப் பண்ணை ஒன்றை தொடங்கி, அதையே தனக்கான தொழிலாக மாற்றிக் கொண்டு, அதில் வெற்றியும் பெற் றிருக்கிறார். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த செஞ்சேரி மலைப் பகுதி யைச் சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் சிவில் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தனது மகளுக்கு சத்தான ஆரோக்கிய மான மாட்டுப்பால் கொடுப்பதற் காக மாடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளார். பின்னாளில், அதையே தனக்கான தொழிலாக மாற்றிக் கொண்டு 80க்கும் மேற் பட்ட காங்கிரேஜ் மற்றும் கீர் இன மாடுகளை வளர்த்து லாபம் ஈட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ராஜேஷ் கார்த்திக் கூறுகையில், மகளுக்கு சத்தான பால் கொடுக்கும் முயற்சி யில் அதற்கான தேடலில் இறங் கிய போது, பாக்கெட் பால்களில் சுவையில்லை, முழுமையான சத் தில்லை, அப்படி, இப்படி என நிறைய கருத்துகளை பார்த்தேன். இதனையடுத்தே, சொந்த தேவைக்காக மாடு வளர்க்கும் ஆசையை தூண்டிவிட்டது. நாட்டு மாடுகளில் எவை அதிக அளவில் பால் கொடுக்கும், எந்த மாட்டு வகையின் பால் சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக இருக்கும் என தேடியபோது, காங்கிரேஜ் வகை மாடுகள்தான் சிறப்பான பதிலாக அமைந்தது. அதனால்தான் அவற்றை வளர்க்க ஆரம்பித்தேன்.
இது இந்திய நாட்டு மாடுகள் இனத்தை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு, மிகவும் கம்பீர மாக இருக்கும். காங்கிரேஜ் இன மாடுகள், சுவையான அதேசமயம் சத்து நிறைந்த பால்தான், இதன் மிக முக்கிய சிறப்பு. நம் ஊர் நாட்டு மாடுகள், ஒருநாளில் அதிக பட்சமாக 3 முதல் 5 லிட்டர் பால் சுரக்கும் என்றால், காங்கிரேஜ் வகை மாடுகளில் 10 முதல் 12 லிட்டர் பால் வரை சுரக்கும். இதன் பாலில், கெட்ட கொழுப்புகள் மிக குறைவு. அதேசமயம் நல்ல கொழுப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டு மாடுகளை விட, இதை வெகு சுலபமாக பரா மரித்துவிட முடியும். மருத்துவ செலவும் மிக குறைவு. இப்படி நிறைய கள ஆய்வுகளை மேற் கொண்ட பிறகுதான், தைரியமாக மாடுகளை வாங்கி வளர்த்தேன். இன்று பெரும்பாலான பெற் றோர், காய்கறிகள் தொடங்கி இறைச்சி வரை எல்லாவற்றிலும் ‘ஆர்கானிக்’ பொருட்களை விரும்புகிறார்கள். அதுவும், அவர் களது வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கோழி களையே மன திருப்தியோடு குழந் தைகளுக்கு பரிமாறுகிறார்கள். அந்த வகையில், இதுவும் அது போன்ற ‘ஹோம்மேட்’ முயற்சி தான். எனக்கும், அப்படியொரு திருப்தி உண்டு. எந்த கலப்படமும் இல்லாத, சத்தான பாலை குடிக்க கொடுக்கிறோம் என்ற மனநிம்மதி உண்டு. இப்போது மாடுகளின் எண் ணிக்கை அதிகமாகி இருப்பதால், என்னுடைய மகள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருக்கும் நிறைய குழந்தைகளும் இந்த பாலை பருகுகிறார்கள். இதன் சுவையை எல்லோரும் உணரும் விதமாக, டீ, காபி போன்றவற்றை தயாரித்து கொடுப்பது உண்டு. என்னை போலவே சிந்தனை கொண்ட பலரும், காங்கிரேஜ் மாடுகளை வளர்க்க ஆசைப் படுகிறார்கள். அவர்களுக்கு அதற் கான வழிகாட்டுதல்களை கொடுப் பதுடன், நிறைய இளைஞர் களுக்கு இதை தொழில் முயற்சி யாக முன்னெடுக்கவும் வழிகாட்டி இருக்கிறேன். காங்கிரேஜ் மாடு வளர்ப்பு லாபகரமான முயற்சி யாக நிச்சயம் இருக்கும். ஒன்றிய அரசு நாட்டு மாடுகளின் இன விருத்தியை ஊக்குவிக்க பல் வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அதை தொழில் முயற்சி யாக முன்னெடுப்பவர்களுக்கு, மானிய உதவிகளையும் வழங்கு கிறது. அதனால், மாடு வளர்க்க ஆசைப்படுபவர்கள் அதை தொழி லாகவே முன்னெடுக்கலாம். பால் உற்பத்தி மட்டுமின்றி, பால் சம்பந்தப்பட்ட மற்ற இதர பொருட்கள் தயாரிப்பும், இதை மேலும் லாபகரமானதாக மாற்றும். மகளின் தேவைக்காக மாடுகளை வளர்க்கத் தொடங்கிய நான் சொந்த ஊரிலிருந்து, கோவை புறநகர பகுதிக்கு இடம் பெயர்ந்ததேன். அங்கு பண்ணையை உருவாக்கி, சுத்தமான நாட்டு மாட்டுப்பால் மற்றும் பாலில் இருந்து உருவாக்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்களையும் தயா ரித்து விற்பனை செய்து வரு கிறேன். சுத்தமான நாட்டு மாட்டு பாலில் டீ, காபி, ரோஸ் மில்க் உள்ளிட்ட பானங்களையும் தயா ரித்து பேக்கரியில் விற்பனை செய்து வருகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மாட்டுப் பண்ணை மூலம் நல்ல வருவாயுடன், மன நிறைவும் கிடைக்கிறது, என்றார். அன்பு மகளுக்கு ஆரோக்கிய மான பால் வேண்டும் என்பதற் காக, மாட்டுப்பண்ணை ஆரம் பித்து, அதனையே முழு நேர தொழிலாக மாற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளார் ராஜேஷ் கார்த்திக். - கார்த்திக் மதிவாணன்.