districts

img

“ஆய்வு மாணவர்களை பாத்திரம் கழுவ வைக்கின்றனர்”

கோவை, அக்.15- முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர், பாரதியார் பல் கலைக் கழகத்தில் உள்ள பிரச்ச னைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியிடம் மனு அளித்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியது.  கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு  விழா திங்களன்று நடைபெற்றது.  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.  செழியன் ஆகியோர் சிறப்பு விருந் தினராக பங்கேற்று மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கினர். இவ்விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பாரதி யார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்ற போது மனு அளித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி மாண வர் பிரகாஷ் கூறுகையில், பல்க லைக் கழகத்தில் ஆய்வாளர்க ளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனை கள் இருக்கிறது. பாரதியார் பல்கலைக் கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்ப தற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாண வர்களை பயன்படுத்துகின்றனர். எனவே இதுகுறித்து புகாரில் தெரிவித்துள்ளதாக கூறினார். அமைச்சர் விடுதியில் அதிரடி ஆய்வு பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநரிடம் மேடையிலேயே புகார் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விழா முடிவடைந்த பிறகு அமைச் சர் கோவி. செழியன் மாணவர்கள்  தங்கியிருக்கும் விடுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மாணவர் கள் எடுத்துக்கொள்ளும் உணவை உண்டு பார்த்து ஆய்வுசெய்த அவர், பின்னர் மாணவர்கள் பயன் படுத்தும் கழிவறையிலும் ஆய்வு  செய்தார். அப்போது அங்கு கடுமை யான துர்நாற்றம் வீசியதை அடுத்து  அங்கிருந்த பல்கலைக்கழக நிர்வா கிகளை கடிந்து கொண்டார். “கவர்னரிடம் புகார் செல்லும் வரை உட்கார்ந்து கொண்டிருக்கி றீர்களா. இப்படி ஒரு பெரிய விழா நடக்கும் போது புகார் வந்தால் ஆய்வு செய்ய வருவார்கள் என் கின்ற சிந்தனை கூட இல்லாமல் இருக்கிறீர்கள்” என நிர்வாகி களிடம் கடிந்து கொண்டார். மேலும், உடனடியாக தற்போது முன்னுக்கு வந்திருக்கும் பிரச்ச னைகளை சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.