districts

img

வேகத்தடை அமைக்க கோரிக்கை

நாமக்கல், மார்ச் 30- மங்களபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி உள்ளது. மங்களபுரத்திலிருந்து உரம்பு செல்லும் சாலையில், கல்லேரிப்பட்டி, தாண்டகவுண்டம்புதூர், அத் திமரத்துகுட்டை உள்ளிட்ட கிராமப்பகுதிகள் உள்ளன. இச் சாலை வழியாக ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும், பள்ளி வாகனங்களும் சென்று  வருகின்றன. இந்நிலையில், கல்லேரிபட்டி - தாண்டாக வுண்டம்புதூர் வளைவில் வேகத்தடை இல்லை. இதன் காரண மாக எதிரே வரும் வாகனங்கள் வளைவில் தெரியாமல் உள்ள தால், சில சமயங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே  விழ வாய்ப்புள்ளது. எனவே, இந்த வளைவில் அரசு விரைந்து  நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைத்து தர வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.