திருப்பூர், நவ.6- சிபிஎம் முயற்சியால் ஊத்துக் குளி - சென்னிமலை சாலை, ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நீண்ட கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கழிவு நீர் வடிகால், சிறுபாலம் மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி - சென்னிமலை ரயில்வே நுழைவு பாலத்தில் மழைக் காலங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி பல ஆண்டுகளாக போக்குவரத்து இடையூறாக இருந் தது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து பேரூ ராட்சி மன்ற கவுன்சிலராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரஸ் வதி குமார் வெற்றி பெற்று பொறுப் பேற்ற உடனே, முதல் மன்ற கூட்டத் திலேயே பாலத்துக்கு அடியில் பேவர் பிளாக் அமைத்து ஓரமாக கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை சந் தித்து இதுகுறித்து மனு அளித்தார். சிக்கலான இப்பிரச்சினையில் ரயில்வே அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்க எழுத்துப்பூர்வ மாக எந்த ஒரு அனுமதியும் அளிக்க முடியாது என தெரிவித்தனர். இருப் பினும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் ஆகியோர் வாய் மொழி உத்தரவாகச் சொன்னதின் அடிப்படையில், நமக்கு நாமே திட்டத் தில் ரூ.1.50 லட்சம் பொதுமக்கள் பங் களிப்பாக செலுத்தி, ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால், சிறு பாலம் மற்றும் பேவர் பிளாக் அமைக் கப்பட்டுள்ளது. பேரூராட்சி 7 ஆவது நகராட்சி உறுப்பினர் கே.சரஸ்வதி குமார் முன்முயற்சியில், ஊத்துக் குளி பேரூராட்சி தலைவர் பழனியம் மாள் ராசுகுட்டி ஒத்துழைப்போடு மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபா லம் மற்றும் பேவர் பிளாக் அமைக்கப் பட்டு முழு பயன்பாட்டுக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரி வித்தனர்.