districts

சட்டப்படி கூலி உயர்வு ஒப்பந்தம் கோரி விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

திருப்பூர், பிப்.23- பல்லடம் அருகே கூலி உயர்வினை ஒப்பந்த வடிவில் வழங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்களை வலி யுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி  வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்க ளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வா தாரமாக உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.  இவர்களிடம் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமா கவும் 3 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தி யாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை.  அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப் பட்டு வருகின்றது.  இந்நிலையில் அரசு அறிவித்த கூலி  உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க  மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த மாவட்ட நிர் வாகங்களை வலியுறுத்தியும் விசைத் தறியாளர்கள் குடும்பத்துடன் கடந்த  21 ஆம் தேதி முதல் காரணம்பேட்டை  பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்ற னர். இந்த உண்ணாவிரத போராட்டத் திற்கு சோமனூர், அவிநாசி, தெக்க லூர், புதுப்பாளையம், பெருமாநல் லூர் என 5 சங்கங்கள் ஆதரவு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர்.  முன்னதாக, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வந்த நிலை யில் அமைச்சர் சாமிநாதன் முன்னிலை யில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 15  சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீ தமும் என உடன்பாடு எட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்லடம், மங்க லம், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 4  சங்கங்கள் போராட்டத்தை வாபஸ்  பெற்று விசைத்தறியை இயக்கி வரு கின்றனர். சோமனூர் உள்ளிட்ட 5  சங்கங்கள் எழுத்து வடிவிலான ஒப்பந் தம் கோரி தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட் டத்தை தீவிரப்படுத்த காரணம் பேட்டை பகுதியில் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள னர். விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 1000க்கும் மேற்பட்டோர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.