திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை
கோவை, டிச.1- சூலூர் அருகே திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் வீட்டின் கதவை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்ப வத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக் கன்பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). திமுகவைச் சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கதிர்நாயக்கன்பாளையத்துக்கு சென்றுள்ளார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த கம்மல், மோதிரம், செயின் உட்பட 22 பவுன் தங்க நகைகள் மற்றும், ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள் ளனர். இதன்பின் வீட்டிற்கு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, 2 பீரோவை திறந்து அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக் களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதி வாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப் பகலில் கவுன்சிலர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாய்க்காலில் குளிக்க சென்றவர் பலி
கோவை, டிச.1- கோவை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பிஏபி வாய்க் காலில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். உத்தரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் உபாத்தாயா (20). இவர் கோவை, செஞ்சேரி பிரிவு அருகே தங்கி, பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். வேலை முடிந்ததும் பிரின்ஸ் உபாத்தாயா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் செஞ்சேரி பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது பிரின்ஸ் உபாத்தாயா திடீரென தவறி வாய்க்காலில் விழுந்தார். அப் போது அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த சுல்தான்பேட்டை போலீசார் பிரின்ஸ் உபாத்தாயாவின் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து
கோவை, டிச.1- சூலூர் அருகே கண்டெய்னர் லாரியும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், நல்வாய்ப் பாக ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூர் பகுதியில் கோவை – கொச்சின் நெடுஞ்சாலை செல்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த வழியில் பயணம் செய்கின்றன. இதனிடையே சேலத்தி லிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் டேங்கர் லாரியில் மோதியது. இதில் டேங்கர் லாரியின் பின்புறம் வந்த மற்றொரு டேங்கர் லாரியும் அடுத்தடுத்து மோதியது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநர்களை மீட்டு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பணியிடை நீக்கம்
தாராபுரம், டிச. 1- நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய சென்ற போது பாதிக்கப்பட்ட நபரை ஓட்டுநர் மற்றும் நடத் துநர்தாக்கிய வழக்கில் இரண்டுபேரையும் மதுரை போக்குவரத்து கழகம் பணியிடைநீக்கம்செய்து உத்தரவிட்டது. கோவையை சேர்ந்த சுப்பிரமணி(48) கூலி தொழி லாளி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கோவைக்கு காரில் சென்ற போதுஅரசு பேருந்து மோதியது. இவ் வழக்கில், நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் பணம் தரவில்லை. இதனையடுத்து நீதி மன்றம் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. ஜப்தி செய்ய சென்றபோது , ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சுப்பிரமணியை தாக்கினர்.இதனையடுத்து, இருவ ரையும் பணியிடை நீக்கம் செய்துபோக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
நஷ்டஈடு வழக்கில், பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
தாராபுரம், டிச. 1- தாராபுரம் பேருந்து நிலையத்தில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய சென்ற போது பாதிக்கப்பட்ட நபரை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சேர்ந்து தாக் கிய வழக்கில் இரண்டு பேரையும் மதுரை போக்குவரத்து கழகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. கோவை அவிநாசி ரோடு விமான நிலைய லோட்டஸ் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் சுப்பிர மணி(48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவ. 14 ஆம் தேதி கோவைக்கு காரில் சென்ற போது அரசு பேருந்து மோதியது. விபத்து குறித்து குண்டடம் போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். தாராபுரம் சார்பு நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சுப்பிரமணிக்கு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஐ நஷ்ட ஈடுதொகையாக வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் பணம் வழங்காமல் இழுத்தடித்த மதுரை மண்டல போக்குவரத்து கழக அரசு பேருந்தை கடந்த நவ.28 அன்று நீதிமன்ற உத்த ரவின் பேரில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர் மற்றும் பாதிக் கப்பட்ட சுப்பிரமணி சென்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியை தாக்கி விட்டு ஜப்தி செய்யப்பட்ட பேருந்தை எடுத்துக் கொண்டு மதுரை நோக்கி சென்றனர். இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர் மற்றும் பாதிக்கப் பட்ட தொழிலாளி இருவரும் சார்பு நீதிமன்றத்தில் புகார் தெரி வித்தனர். அதன் அடிப்படையில் சார்பு நீதிமன்றம் நீதிபதி எம். தர்மபிரபு நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், பாதிக்கப்பட்ட நபரை தாக்கிய பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ராகவன் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி யத்துக்கு வட்டியுடன் நீதிமன்றத்தில் ரூ.4 லட்சத்து ரூ.70 ஆயி ரம் கட்டியதுடன் பேருந்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத் தார். நீதிமன்றம் உத்திரவை மதிக்காமல் குற்ற சம்பவத்தில் ஈடு பட்ட மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட் டுநர் மணிவண்ணன் மற்றும் மதுரை மேலப்ப நகரை சேர்ந்த நடத்துநர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் நீதி மன்ற மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை பொது மேலாளர் ராகவன் உத்தரவிட் டார்.
மின்தடை அறிவிப்பு
மின்தடை அறிவிப்பு உடுமலை, டிச.1- உடுமலை தாலூக்க பாலப்பட்டி துணை மின்நிலை யத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் சனிக்கி ழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் தடைப்படும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடைப்படும் பகுதிகள்: உடுமலை காந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், மைவாடி, கண்ணமநாயக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துவுள்ளார்.
உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
திருப்பூர், டிச.1- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறையின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்கள் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் வியாழனன்று மாவட்ட ஆட்சி யர் அலுவல கூட்டரங்கில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து திருப் பூர் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினம் வியா ழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. பொதுமக் கள் இளைஞர்கள் மற்றும் அதிக தொற்று பெற வாய்ப்புள்ளவர்ளிடையே எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை சமூக த்திலிருந்து புறக்கணிக்கப்படாமல் கவனிப்பு மற்றும் ஆதரவு அதிகரிக்கும் விதத்தில் பொதுமக்களிடையே எச்ஐவி எய்ட்ஸ் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, எச்ஐவி தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்கிட அனைத் துத்துறை அரசு அலுவலர்கள் முன்னிலை யில் எச்ஐவிஎய்ட்ஸ் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பல்லவி வர்மா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரா.முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்கு நர் (சுகாதாரப்பணிகள்) கே.ஜெகதீஷ்குமார், மாவட்ட திட்ட மேலாளர்கள் என்.ஹரிஹரகுகன், ச.சிவக்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பணியாளர்கள், இலக்கு மக்களுக்கான தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய மின் தடை
நாளைய மின் தடை அவிநாசி, டிச.1- அவிநாசி துணை மின்நி லையத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெறுவ தால், கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினர் அறி வித்துள்ளனர். மின் விநியோகம் தடை படும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமா பாளையம், செம்பியநல் லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட் டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டி பாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளை யம்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:49.05/60அடி நீர்வரத்து:724கன அடி வெளியேற்றம்:996கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.47/90அடி. நீர்வரத்து:496கனஅடி வெளியேற்றம்:433கன அடி
தமிழகத்தில் சிறந்த பள்ளிகளில் பாரதிபுரம் நடுநிலைப் பள்ளி தேர்வு
திருப்பூர், டிச. 1 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பாரதிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழகத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன் றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அளவில் 38 மாவட்டங்க ளில் மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய் யப்பட்டுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு கல்வி மாவட்டத்தில் பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யும், வெள்ளகோவில் கல்வி மாவட் டத்தில் முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், உடுமலைப் பேட்டை கல்வி மாவட்டத்தில் ஆண் டிய கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் சிறந்த பள்ளி களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், பாரதிபுரம் நடுநிலைப் பள் ளியின் தலைமை ஆசிரியர் காளீஸ் வரி அண்மையில் நல்லாசிரியர் விரு துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் விருது பெற்றிருக்கும் நிலை யில் அவர் தலைமையில் செயல்ப டும் பாரதிபுரம் பள்ளியும் சிறந்த பள் ளியாகத் தேர்வு செய்யப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் க. கணேசன் இப்பள்ளிக்கும், தலைமை ஆசிரியருக்கும் பாராட் டுத் தெரிவித்துள்ளார். இதில் சமீபத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று இடு வாய் ஊராட்சிக்கு பெருமை சேர்த்தி ருந்த வேளையில், தற்போது அவர் பயிற்றுவிக்கும் பள்ளியும் சிறந்த பள்ளி என தேர்வு செய்யப்பட்டு இருப்பது இடுவாய் ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் இந்த ஒரு பள்ளி மட்டும் தேர்வாகி யுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாகும். இத்தகைய சிறப்பான பள்ளி யாக மாற்ற தன்னலம் கருதாது உழைத்த தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் மற்றும் உடன் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பயி லும் மாணவ மாணவிகளுக்கு இடு வாய் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சார்பாக மனம் மகிழ்ந்த வாழ்த்துகளை தெரிவித் துக் கொள்வதாக கூறியுள்ளார்.
பின்னலாடை பருத்தி நூல் விலையில் மாற்றமில்லை
திருப்பூர், டிச. 1 - கடந்த மாதம் பின்னலாடை பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்த நிலையில் தற்பொழுது நடப்பு மாதத்திற் கான நூல் விலையில் எந்த மாற்றமுமின்றி கடந்த மாத விலையே தொடரும் என நூற் பாலைகள் அறிவித்துள்ளன. திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வரு வது பருத்தி நூல் ஆகும். தொழில் துறையி னர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப் பார்கள். நூல் விலை உள்பட மூலப் பொருட் களின் விலையை கருத்தில் கொண்டு ஆடை களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் கடுமை யான ஏற்ற இறக்கம் ஏற்படுவதால், தொழில்து றையினர் கடும் பாதிப்பைச் சந்தித்து வரு கின்றனர். குறிப்பாக ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. நூல் விலை உயரும்போது ஆடை விலையை உயர்த்தினால், அதிக விலை என்று ஆர்டர் கள் கிடைப்பதில்லை, நூல் விலை குறைந் தாலும், ஏற்கெனவே கொல்முதல் செய்த நூலில் ஆடை உற்பத்தி செய்யும்போது, விலையைக் குறைத்து கேட்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களா கவே அடிக்கடி நூல் விலை நிலையாக இல் லாமல் உள்ளது. எனவே நூல் விலையை குறைப்பதுடன், சீரான விலையில் நிலை யாக இருக்கும்படி செய்ய வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.20 நூல் விலை குறைந்த நிலையில் நடப்பு டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலை கள் மாதத்தின் முதல் நாளான டிசம்பர் 1ஆம் தேதி வெளியிட்டன. இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, கடந்த மாதம் விலையே தொடரும் எனவும் நூற்பாலை கள் தெரிவித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ 20-ஆவது நம்பர் கோம்புடு நூல் ரூ.273-க்கும், 24-ஆம் நம்பர் ரூ.285-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.295-க்கும், 34-ஆம் நம்பர் ரூ.315-க்கும், 40- ஆம் நம்பர் ரூ.335-க்கும், 20-ஆம் நம்பர் செமி கோம்புடு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ஆம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.285-க் கும், 34-ஆம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் கூடாது மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி பேச்சு
உதகை, டிச.1- பழங்குடியின மக்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கக்கூடாது என மசினகுடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி அரசு பள்ளி யில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதன்பின் தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு கள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டு, பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பழங்குடியின மக்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப் போது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதி மொழி வாசிக்கப்பட்டது. இதன்பின், மகளிர் ஆணைய தலைர் ஏ.எஸ்.குமாரி பேசுகையில், பழங்குடியின மக்கள் தங்கள் பெண் குழந்தை களை சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக்கூடாது. அறி வியல் ரீதியாக 18 வயதை கடந்த பின்னரே பெண் திருமணம் செய்து கொள்வதற்கான பருவத்தை அடைகிறாள். தமிழ கத்தை விட மற்ற மாநிலங்களில் பெண்கள், குழந்தை களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால், அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என கண்காணிப்பதற்காக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார். இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலை வர் கீர்த்தனா, மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பழங்குடியின குழந் தைகளின் பாரம்பரிய நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
குட்கா விற்பனை: கடைக்கு ‘சீல்’
தருமபுரி, டிச.1-. தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவுப் பாதுகாப்பு துறை யினர் மொரப்பூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, ஒரு கடையில் அர சால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது. தொடர்ந்து, அந்தக் கடையை பூட்டி உண வுப் பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர்.