உடுமலை, மே 24 - சிஐடியு நடைபயண பிரச்சாரக் குழு விற்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக் கப்பட்டது. சிஐடியு கோவை மண்டல நடைபய ணப் பிரச்சாரக்குழு சார்பில் செவ்வா யன்று பெதப்பம்பட்டி நால் ரோட்டில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தப்பட் டது. புதனன்று உடுமலை தாலுகா, பள்ள பாளையம் பகுதியில் துவங்கிய பிரச் சாரத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித் தார். சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால் பிரச்சா ரத்தை துவக்கி வைத்தார். பள்ளபாளயம், போடிபட்டி, எலைய முத்தூர் பிரிவு, காந்தி சவுக், நாரயண கவி மணிமண்டபம், சித்திரக்கூடம் மற் றும் மத்திய பேருந்து நிலையம் பகுதி யில் நடைபயணக் குழுவினர் பிரச்சாரம் செய்தனர். அங்கிருந்து மடத்துக்குளம் தாலுகா பகுதியில் பிரச்சாரம் செய்த நடைபயணக்குழு தாராபுரம் பகுதிக்கு சென்றது. முன்னதாக பிரச்சார நடைபயணக் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், முற்போக்கு எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர் சங்கம், பஞ்சாலை தொழி லாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம்,
பொது தொழிலாளர் சங்கம், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழி யர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம், அனைத்து துறை அரசு ஊழியர் ஓய்வூ தியர் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பூமாலைகள், கதர் ஆடைகள் அணிவித்தும், புத்த கங்கள் மற்றும் நிதியும் வழங்கி ஆதரவ ளிக்கப்பட்டது. நடைபயணக் குழுவின் தலைவர் சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபி குமார் தலைமையில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, திருப்பூர் மாவட்ட மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டத் துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், சிஐடியு கட்டுமான சங்க பொதுச் செயலாளர் டி.குமார், சிஐடியு நிர்வாகி கள் விஸ்வநாதன், எல்லம்மாள், வெண் ணிலா மற்றும் சிஐடியு உடுமலை நிர்வா கிகள் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். தாராபுரத்தில் வரவேற்பு அதேபோல் சிஐடியு நடைபயண பிரச்சாரக் குழுவுக்கு தாராபுரத்தில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாராபு ரம் பெரியார் சிலை அருகில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம், பொள் ளாச்சி சாலை, பூக்கடை கார்னர், பெரி யகடை வீதி வழியாக நடைபயண பிரச் சாரம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங் கம் சார்பில் பொள்ளாச்சி ரவுண்டானா அருகில் மலர் தூவி வரவேற்பு அளிக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா சிலை முன்பு கோரிக்கை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது. நடைபயண குழுவினருடன் விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், சிபிஎம் தாலூகா செயலா ளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகி கள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னு சாமி, கி.மேகவர்ணன், ஆ.மணியன், சத் தீஸ்வரன் மற்றும் சிபிஎம், சிஐடியு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கிருந்து நடை பயண குழுவினர் காங்கேயத்திற்குச் சென்றனர்.