சேலம், டிச.9- கேரளாவில் நடைபெற உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் மாநாட்டிற்கு கொண்டு செல்லப் படும் தியாகிகள் ஜோதிக்கு வழி யெங்கும் விவசாயிகள் எழுச்சி வர வேற்பு அளித்து வருகின்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் 35 ஆவது மாநாடு கேரள மாநிலம், திருச்சூரில் டிச.13 முதல் டிச. 16 வரை நடைபெற உள்ளது. இதை யொட்டி சேலம் சிறைத்தியாகிகள் நினைவுச்சுடர் ஏந்தி செல்லும் எழுச்சி மிகு நிகழ்ச்சி சேலம் மத்திய சிறைச் சாலை முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சேலம் சிறைத்தியாகிகள் நினைவுச்சுடரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் எடுத்து கொடுக்க, அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அகில இந்திய விவ சாயிகள் சங்க நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நட ராஜன், சிபிஐ (எம்எல்) விவசாயிகள் சங்க தலைவர் சந்திரமோகன் ஆகி யோர் உரையாற்றினர். வெண்மணி மற்றும் தெலுங்கானா நினைவுச்சுடர் குழுவில் வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.கே.பிரீஜா, நிர்வாகிகள் பிரகாசம் மாஸ்டர், சாகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள், துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட தலைவர் ஏ.அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பி.தங்கவேலு, ஏ.பொன்னுசாமி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. அரியாக்கவுண்டர், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், தாலுகா செயலாளர் கே.எஸ். பழனிசாமி, மேற்கு மாநகர செய லாளர் எம்.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மேட்டூர் மாங் குயில் வசந்தியின் பாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்த வீரத்தெலுங்கானா, வெண்மணி, சேலம் சிறை தியாகிகள் ஜோதி பயணக் குழுவிற்கு சிஐடியு, விவசாயிகள் சங்கத் தின் சார்பில் எழுச்சி வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்நிகழ்விற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் இ.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொண்டு, உரையாற்றினர்.
ஈரோடு
இதைத்தொடர்ந்து தியாகிகள் நினைவு சுடர் பயணக்குழு ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற வரவேற்புக்கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரி முத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி வரவேற் றார். விஜூ கிருஷ்ணன் மாநாட்டு நோக் கங்களை விளக்கி சிறப்புரை ஆற் றினார். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், செயலாளர் ஹெச்.ஸ்ரீராம், விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பி.சடையப்பன், பொருளாளர் ரத்னம், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. சண்முகவள்ளி, மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் எம்.சடையலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் நன்றி கூறினார். இதன்பின் பெருந்துறை பேருந்து நிலையத்தில் அளிக்கப்பட்ட வர வேற்பு நிகழ்விற்கு விவசாயிகள் சங்க தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இதில், கரும்பு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் டி.பி.கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.