நாமக்கல், அக்.16- பள்ளிபாளையம் அருகே விவசாய நிலத்தை பாழ்படுத் தும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற் றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் கிராமத்தில் சர்வே எண்:532/4,5 அதற் குரிய பட்டா எண்கள் 8675, 8660 என்ற விவசாய நிலத்தில் விதி முறைகளை மீறி மேங்கோ கார்டன் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வீட்டுமனைகளிலிருந்து வெளி யேறும் கழிவுநீரை, மேட்டூர் கிழகரை பாசன வாய்க்காலுக் குள் கலந்து விவசாயத்தை சீரழிக்கும் விதமாக வடிவமைத்து அனுமதி பெற்றுள்ளனர். இதனால் இப்பகுதியிலுள்ள 12 விவ சாய கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது. மேலும், அரசு சட்ட விதிகளை மீறி, விவசாய நிலத்தை பிளாட் போட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அனைத்து அரசு அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பாளையம் பகுதி விவசாயிகள் ஆடு, மாடு. உள்ளிட்ட கால்நடைகளுடன் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டு, உங்களுடைய கோரிக்கைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.