districts

img

கோவையில் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்: முத்துசாமி

இந்தியா கூட்டணியின் கோவை மற் றும் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்.13 ஆம் தேதி கோவை வருகை தர உள்ளார். அதற்கான பணிகள் செட்டிபாளையம், எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளை தமிழக அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு மேற் கொண்டார்.  இதைத்தொடர்ந்து பேட்டியின்போது அமைச்சர் பேசுகையில், இந்தியா கூட் டணியின் கோவை - பொள்ளாச்சி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து 13 ந்தேதி மாலை 5 மணிக்கு செட்டிபாளையம்  எல் அண் டி புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் தேர் தல் பிரச்சார மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள் ளார். ஈரோட்டில் திட்டமிட்டதற்கு மேல் அதிகமானோர் வந்ததால், கோவையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க கூடிய அளவில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள் ளது. இதில், இந்தியா கூட்டணியின் தலை வர்கள் பங்கேற்க உள்ளனர், என்றார்.