districts

img

ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

சேலம், அக்.26- விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு மாணவர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற் றது. தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவிற்கு மதுரை காமரா ஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தும், இதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்த தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவிக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட் டம், அஸ்தம்பட்டி தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அருண் குமார், மாவட்டச் செயலாளர் பவித்ரன், துணைச்செயலாளர் டார்வின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோகுல், கீர்த்தி வாசன், பிரியதர்ஷினி, திவ்யா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.