அவிநாசி, மார்ச் 4 - அவிநாசி மங்கலம் செல்லும் சாலை யில் தனியார் பள்ளி நிர்வாகம் காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து காவல் துறையின் தடுப்பரண்களை (பேரி கார்ட்) சாலையில் வைத்து பொது வாகன ஓட்டிகளுக்கு பெருத்த இடை யூறு ஏற்படுத்தி வருகிறது. அவிநாசி ஒன்றியம் மங்கலம் சாலை யிலிருந்து வஞ்சிபாளையம் வரை செல் லும் மாநில அரசின் நெடுஞ்சாலையில், தினசரி கனரக வாகனம் முதல் இரண்டு சக்கர வாகனம் என நூற்றுக்கும் மேற்பட் டோர் சென்று வருகின்றனர். இந்நிலை யில் மங்கலம் சாலை கருணைபாளை யம் பிரிவு அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி நிர்வாகம் காலை மற்றும் மாலை நேரங் களில், பள்ளி நுழைவாயில் முன்பு அப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நான்கு சக்கர, இருசக்கர வாகனங்க ளில் அழைத்து செல்வதற்கு ஏதுவாக வலதுபுறம் இரண்டு தடுப்பரண்கள், இடதுபுறம் இரண்டு தடுப்பரண்களும் சாலையின் குறுக்காக மறைத்து வைத்து விடுகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வேலைக்குச் செல்வது, மருத்துவம னைக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு சொந்த பணிகளுக்குக் குறித்த நேரத் திற்கு செல்ல முடியாமல் பாதித்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி கூறு கையில் இதுகுறித்து பலமுறை காவல் துறையிடம் தெரிவித்து எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தெரிவித்தும், இதேநிலை நீடிக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப் பாளரும், மாவட்ட ஆட்சியரும் தலை யிட்டு பொதுப் போக்குவரத்துக்கு வச தியாக தடுப்பரண்களை அப்புறப்ப டுத்த வேண்டும். இதே நிலை தொடர்ந் தால் பள்ளி மீது கடுமையான நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பி.முத்துசாமி கோரிக்கை விடுத்துள் ளார். மேலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் மக்களை திரட்டிப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.