districts

img

கோவையில் கருவுற்ற யானை உயிரிழப்பு

கோவை, செப்.18- போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கரு வுற்ற யானை உயிரிழந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனத்துறையினர் நரசிபுரம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த னர். ஞாயிறன்று, மாலை நரசிபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி அருகே கழுதை சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர்.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மாலை  நேரம் ஆனதால் மற்ற யானைகளின் நடமாட் டம் இருப்பதாலும், யானையின் உடல் திங்க ளன்று பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, கோவை வனக் கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார், வனச்சரகர் சுசீந்திரன் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு அங்கு சென்று உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது உயிரிழந்த யானையின் வயிற்றில்  சுமார் 20 மாதமான ஆண் குட்டி யானை இருந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், உயிரிழந்த யானைக்கு சுமார் 20 முதல் 22 வயது இருக்கும். கருவுற்றி ருந்த பெண் யானை பிரசவ காலத்திற்காக நீரோடைக்கு அருகே வரும்போது பிரசவிக்க முடியாமல் உயிரிழந்தது பரிசோதனை தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர்.