districts

img

அடியோடு பெயர்ந்து விழுந்த மின் கம்பம் அச்சத்தில் காமராஜ் குடியிருப்பு மக்கள்

திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் பெரியாண்டிபாளையம் காமராஜ் குடியிருப் பில் மின் கம்பம் ஒன்று அடியோடு பெயர்ந்து விழுந்தது.  இதேபோல் இன்னும் பல மின் கம்பங்கள் ஆபத்தான நிலை யில் இருப்பதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக இந்த கம்பங்களை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் பெரியாண்டிபாளளையம் காமராஜ் குடியி ருப்பு வீதியில் பழுதடைந்த மின் கம்பம் ஒன்று வெள்ளிக்கிழமை திடீரென அடியோடு பெயர்ந்து கீழே  விழுந்தது. அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாத நிலை யில், நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே  சமயம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும்  இந்த பகுதியில் உள்ள வீதிகளில் 10க்கும் மேற்பட்ட மின் கம் பங்கள் இது போல் அடி முதல் மேல் பகுதி வரை சிமெண்ட்  காறைகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் அரிமான மாகி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடும் என்ற  அபாய நிலையில் உள்ளன. எனவே திருப்பூர் மாநகராட்சி  நிர்வாகம், மின்கம்பம் கீழே விழுந்தததை எச்சரிக்கை மணி யாக கவனத்தில் கொண்டு மீதமிருக்கும் பழுதடைந்த மின்  கம்பங்களையும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியாண்டி பாளையம் கிளைச் செயலாளர் ராஜன் இப்பகுதி மக்கள்  சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.