districts

img

உதகை: ஒரு நாள் களப்பயிற்சி வகுப்பு

உதகை, ஜன.10- அறிவியலும் பாரம்பரியமும் இணைந்த இயற்கை விவசாயத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல  வேண்டுமென்று ஒருநாள் களப் பயிற்சி வகுப்பு நடைபெற் றது. உதகையில் ஒருநாள் களப் பயிற்சி வகுப்பு ஒய்.எம்.சி.ஏ.  அரங்கில் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் நீடித்த நிலைதன்மைக்கான வாழ்வியல் பயிற்சி கள தேசிய பசுமைப் படை ஆசிரியர்கள், தேர்ந்தெ டுக்கப்பட்ட 10 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் கலந்து  கொண்டனர்.  இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் கலந்து  கொண்டு கூறியதாவது. இயற்கையை பாதுகாப்பது மாண வர்களின் கடமை, இயற்கையின்றி எதிர்காலம் இல்லை,  இயற்கை அறிவியலும் பாரம்பரியமும் இணைந்த இயற்கை  விவசாயத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் ஆசிரியர்கள், மணவர்களின் பங்கு குறித்து உரையாற்றினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  சந்திர சேகர், தேசிய பசுமை படை சூழல் ஆர்வலர் ராபர்ட், சுற்றுச்சூ ழல் ஆர்வலர்கள் ஜோ‌பினா‌ஜேஸ்பால் உள்ளிபட்ட பலர் கலந்து கொண்டனர்.