கோயம்புத்தூர், ஆக. 24- தமிழ்நாடு காவல்துறையில் புதிய சித்ர வதைக்கலாச்சாரம் உருவாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தடுத்திட தலையிட வேண்டும் என கோவையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற நீதிபதியிடம் மூத்த வழக்க றிஞர்கள் கே. சுப்பிரமணியன், நிக்கோலஸ், மாசே துங், அண்ணாதுரை உள்ளிட்டோர் அளித்திருக் கும் அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சமீப காலங்களில் தமிழ்நாடு காவல்துறை யில் ஒரு புதிய சித்ரவதைக் கலாச்சாரம் உருவாக் கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்ட வர்களை, கைது செய்கிற போது கால்களில் துப் பாக்கி சூடு நடத்துவது, கை-கால்கள் முறிக்கப் பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றக் காவ லுக்கு உட்படுத்துவது தொடர்கிறது.
சட்ட விரோதக் காவல்- சித்ரவதைக் கொடுமைகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படும் போது, வழுக்கி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக காரணம் கூறி காவல் அடைப்பு செய்கின்றனர். காவல்துறையினர் துரத்தும்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இறந்து போன சம்பவங்கள் கூட உள்ளன.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ர வதை செய்வதற்கென்றே திருமண மண்ட பங்கள், கட்டடங்களில் சில நாட்கள், சட்ட விரோ தக் காவலில் வைப்பதையும், சித்ரவதை செய்வதையும் வழக்காடிகள் குறிப்பிடுகின்றனர். காவல்துறை சித்திரவதை வழக்கமான ஒன்றாக இயல்பாக மாறிவருகிறது.
காவல்துறையே தண்டனை வழங்குவது அதிகரிப்பு
சித்ரவதை இல்லாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு விசாரணைக்கு பின்னால் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையி லான தண்டனைக்கு பதிலாக, காவல்துறை யைச் சார்ந்தவர்களே சித்திரவதை என்ற வடி வில் சட்டத்திற்கு புறம்பாக தண்டனை தருகின்ற ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. காவல் சித்ர வதை என்ற வடிவமானது தனிமனித சுதந்திரம், உயிர்வாழும் உரிமையைப் பறிக்கின்ற ஒன் றாக உள்ளது. காவல்துறையில் நடைபெறும் சித்ரவதைகளுக்கு எதிராக பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தினசரி நடை பெறும் காவல்துறை சித்ரவதை, அதனால் ஏற்படும் உடல் ஊனங்களைப் பார்க்கின்ற போது நடைமுறையில் அத்தீர்ப்புகளை காவல்துறை மதிக்கின்ற சூழலில் இல்லை என்பது தெளிவாகிறது.
சித்ரவதை செய்வது என்பது ஒருங்கிணைக் கப்பட்ட, உயர் அதிகாரிகளின் அனுமதியோடு தொடர்வது வேதனை அளிக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், மனித உரிமை, தனி மனித சுதந்திரம் குறித்த அக்கறை இன்மையோடும், அலட்சியத்தோடும் செயல்படும் வெளிப் பாடாக இந்த சித்திரவதைகள் அமைந்துள்ளன.
அபத்தமான காரணங்களை அப்படியே ஏற்பது சரியல்ல!
எனவே, காவல் சித்திரவதைகள் தொடர்பாக தங்களின் நேரடியாக தலையீடு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து காவல் சித்ரவதைகளைத் தடுக்க வழிவகை காண வேண்டும். காவல் அடைப்பின் போது கைகால்கள் உடைக்கப்பட்டு அல்லது காவல்நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்ததாக சொல்லப்படுகின்ற அபத்தமான காரணங்களை அப்படியே விசாரணை நீதி மன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளாமல் உரிய விசாரணை செய்து சித்திரவதைகளைத் தடுப்ப தற்கு தாங்கள் எல்லைக்கு உட்பட்ட விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். காவல் சித்திரவதை என்பது ஒரு மனி தனின் வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தக் கூடிய ஒரு காயம் என்ற காரணத்தினால் அந்த சித்ர வதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற தாங்கள் வழிகாட்ட வேண்டும்.
கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமற்றும் “Parumvir Singh Saini Vs Balji Singh and others (SLP(Crl) No.3543/2020) கட்டாயமாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். அது மனித உரிமை மீறல் புகார் கள் வருகின்ற போது பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப் பின் படி காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கும் நிலையில் பொருத்தப் பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
நீதித்துறை - காவல்துறைக்கு வழிகாட்டுதல் அவசியம்
காவல் சித்திரவதை தொடர்பாக விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையோடும், விழிப்போடும் அணுக வேண்டும் என தாங்கள் வழிகாட்டுவது அவசியமாகும். கோயம்பத்தூர் மாவட்ட/மாநகரக் காவல்துறை அதிகாரிகளு க்கு சித்ரவதைகள், சட்டத்திற்கு புறம்பான காயம் ஏற்படுத்துதல் போன்ற வடிவங்கள் இல்லாத விசாரணை, கைது நடவடிக்கையை மேற் ற்கொள்ள தாங்கள் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். காவல் சித்திரவதையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் உணரும் போது காவல் அடைப்பு சமயத்தில் பாதிக்கப்பட்டவரிடம் உரிய வாக்குமூலம் பெற்று அதனை வழக்காக மாற்ற வேண்டியது அவசியமாகும். சட்டத்தின் ஆட்சி, சித்ர வதைகள் இல்லாத நடைமுறையை கோயம் புத்தூர் மாவட்டத்தில் நிறுவ உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.