நாமக்கல், ஜுன் 21- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டி பாளையம் பகுதியில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மக்கள் விரோத பிஜேபி அரசைக் கண்டித்தும், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண் டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட் டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். வெறுப்பு அரசி யலை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஆர்.மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஏ. ஆதிநாராயணன், எம்.அசோகன், நகர செயலாளர் ஐ. ராயப்பன், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர். வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகுமார், பி. பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில், 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.