கோவை, டிச.18 - அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 ஐ வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 37 ஆவது தேசிய ஓய்வூதியர் தின கருத்தரங்கம் டவுன்ஹாலில் உள்ள டிஇஎல்சி அரங்கத்தில் நடை பெற்றது. ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் என். சின்னச்சாமி கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் என்.அரங்கநாதன் வரவேற் புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் சிறப்புரையாற்றினார். இதில், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத் தின் மாநில துணை தலைவர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு வரு மான வரித்துறை ஓய்வூதியர் சங்க மாநில இணைச் செயலாளர் வி.பழனிவேல், பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் டி.கே.பிரசன்னா, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தின் பி. சுரேந்திரன் ஆகியோர் ஓய்வூதியர் தின கருத்தரங்கில் பங் கேற்று உரையாற்றினர்.
முன்னதாக, அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மதன், அஞ்சல் ஆர்எம்எஸ் இணைச் செயலாளர் டி.எஸ்.வெங்கடாச்சலம்,, மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் கே. இராமச்சந்திரன், பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் எஸ்.என்.மாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில் ஒன்றிய, மாநில அரசுகள், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூ தியத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அகவிலைப் படியை எல்லா பிரிவு அனைத்து ஓய்வூதியர்களுக்கும் நிலுவையின்றி வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைகளின் படி 65 வயது முதல் கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில், ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற் றனர். முடிவில், ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட பொரு ளாளர் எ.குடியரசு நன்றியுரை கூறினார்.