கோவை, அக்.7- பிஏபி திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடு மலை சாலையிலுள்ள மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தின விழா வெள்ளியன்று அரசு சார்பில் கொண்டா டப்பட்டது. இந்நிகழ்வில் பரம்பிக்குளம் - ஆழி யாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரண மாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனி சாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணி யம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பொள் ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல். ராவ் ஆகியோரின் உருவப்படத்திற்கு தமி ழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின் னர், மேற்கண்ட தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமி நாதன் சால்வை அணிவித்து சிறப்பித்தார். இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநா தன் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் முக்கியமான பெரிய பாசன திட்டமாக பரம் பிக்குளம் - ஆழியார் பாசனத்திட்டம் திகழ் கிறது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவ கர்லால் நேருவால் 7.10.1961 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தற் பொழுது லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கேரளா மாநிலத்துடன் ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, மலைகளை குடைந்து, இரு மலை களை இணைத்து கால்வாய் வழியாக தண் ணீரை பாசனத்திற்காக ஆழியாறு, திரு மூர்த்தி அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை கோவை மற்றும் திருப் பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகை யில் உருவாக்கி தந்த, மேற்கண்ட மாமனிதர் களை நினைவு கூறும் வகையிலும், அவர் களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், செய்தித்துறை மற்றும் நீர்வளத்துறை இணைந்து முதல் முறையாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினம் இன்று (வெள் ளியன்று) கொண்டாடப்படுகிறது. மேலும், பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத்துறை யின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு பாரத ரத்னா “சி.சுப்பிரமணி யம் வளாகம்” என்ற பெயரும், இவ்வளாகத் தில், விவசாயப் பெருமக்களுக்குப் பயிற்சி கள் மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சி கள் நடத்திட ஏதுவாக இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கும், இவ்வரங்கத்திற்கு “வி.கே.பழனிசாமி அரங்கம்” எனப் பெய ரும், மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங் கத்திற்கு “பொள்ளாச்சி நா.மகாலிங்கம்” பெயரும், இம்மண்டபத்தில் பரம்பிக்குளம் ஆழியாறுத் திட்டப்பணிகள் குறித்துப் பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப் படக் கண்காட்சியும் அமைக்கப்படும்.
மேலும், வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ஆழியாறு அணையின் பூங்காவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணியினை பிஏபி திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும். தமி ழக முதல்வர் மு.க.ஸ்டானின், கேரளா முதல் வர் பினராயி விஜயன்-யை நேரில் சந்தித்து ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டம், கீழ் பவானி பாசனத்திட்டத்திற்கு உறுதுணை யாக பாண்டியாறு - புன்னம்புழா ஆறு திட்டத் தினை நிறைவேற்றுதல் தொடர்பாக கடி தத்தை அளித்துள்ளார். இதுதொடர்பாக திட் டங்களை நிறைவேற்ற அனைவருக்கும் ஒன் றிணைந்து செயல்படுவோம், என்றார். முன்னதாக, இவ்விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்த ரம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக் கரே சுபம் ஞானதேவ்ராவ், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொ.முத்துசாமி, கண் காணிப்பு பொறியாளர் தேவராஜன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.