districts

img

மார்க்சிஸ்ட் கட்சி தோழர் காலமானார்

ஈரோடு, ஜூன் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் பகுதியின் மூத்த தோழர்  ஏ.எம்.செல்வம் (எ) பரமேஸ்வரன் புதனன்று காலமானார். ஈரோடு மாவட்டம், அந்தி யூர் நகரில் 1980-81 ஆம் ஆண் டில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மூலம் அரசியல் நடவடிக்கையை துவக்கி, பின் னர், மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட இயக்கங்களில் முன்னணி ஊழியராக திகழ்ந்தவர் தோழர் ஏ.எம்.செல்வம். கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய அவர், அந்தி யூர் மற்றும் ஈரோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் புதனன்று காலமானார். இவரின் மறைவையறிந்து, அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிச்சாமி, ஆர். விஜயராகவன், அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகே சன், பவானி தாலுக்கா செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட திரளா னோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.