கோவை, ஜன.11- புலியகுளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பயண்பாடின்றி இருந்த கோவை மாநகராட்சி திருமண மண்டபம், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கோவை, புலியகுளம் பகுதி யில் புதிதாக மாநகராட்சி திருமண மண்டபம் கட்டும் பணிகள் நடை பெற்று வந்தது. தொடர்ந்து, பணி கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி அதிகாரிகளை பல முறை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலை யில், மனுக்கள் மீது நடவடிக்க எடுத்த மாநகராட்சி நிர்வாகம், வியாழ னன்று மண்டபத்தை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தது. திருமண மண்டபத்தை, மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ், கிளைச் செயலாளர் ஆட்டோ நாகராஜ் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.