கோவை, மார்ச் 25- கோவையில் மின்கம்பம் விழுந் ததில் ஆண் காட்டுயானை உயிரி ழந்த சம்பவம் குறித்து வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் வன சரகத் திற்குட்பட்ட வனப்பகுதிகளில் அதி களவில் காட்டு யானைகள் உள் ளன. இந்த யானைகள் அவ்வப் போது வனத்தை விட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி சமவெளி பகுதிகளுக்குள் நுழைவது வாடிக் கையாகி வருகிறது. இந்நிலையில், பூச்சியூரை அடுத்த ராவத்தூர், குள் ளனூர் பகுதியில் உள்ள ஒரு தோட் டத்திற்கு சனியன்று அதிகாலை யில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை வனத்தை விட்டு வெளியேறி வந்தது. வெகுநேரமாக தோட்டத்தில் யானை சுற்றி திரிந் தது. இதனையறிந்த அப்பகுதி மக் கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தோட்டத்தில் நின்ற காட்டு யானையை அங்கிருந்து வனத்தை நோக்கி விரட்டினர். யானை யும் வனத்தை நோக்கி சென்றுவிட் டது. யானை சென்றதால் வனத்து றையினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். இந்நிலையில், சில மணி நேரங் களுக்கு பிறகு அந்த யானை மீண் டும் வனத்திற்குள் இருந்து ஊரை நோக்கி நடந்து வந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பட்டா நிலத்திற்கு வந்த யானை, அங்கி ருந்த மின் கம்பத்தின் மீது சென்று உரசி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்தது. மின் கம்பம் விழுந்த வேகத்தில் யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. யானை மீது மின்கம்பம் விழுந்ததை பார்த்த அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் வேகமாக அருகே ஓடினர்.
ஆனால், அதற்குள்ளாகவே மின்கம்பத்திலி ருந்து யானை மீது மின்சாரம் பாய்ந் தது. இதில், யானையின் உடல் முழு வதும் மின்சாரம் பாய்ந்ததில், சம் பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மின்வாரியத் திற்கு தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டித்தனர். இதைத் தொடர்ந்து மின்கம்பத்தை அகற்றி விட்டு, யானையின் உடலை மீட்ட னர். இதற்கிடையே தகவலறிந்த தும் உதவி வன பாதுகாவலர் செந் தில் சம்பவ இடத்தில் நேரில் விசா ரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானையின் உடலை பிரேத பரிசோ தனை செய்யும் பணியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. அந்த துயர சம்பவமே இன்னும் நீங் காத நிலையில், கோவையில் மீண் டும் ஒரு யானை மின்கம்பம் விழுந் தும், மின்சாரம் தாக்கியும் இறந்துள் ளது பொதுமக்கள் மற்றும் வன உயி ரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து யானைகள் இறப்பது அதிகரித்து வருவது வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு உரிய தலையீட்டை செலுத்த வேண் டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.