திருப்பூர், நவ.17- தோழர் சங்கரய்யாவின் மறைவு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான இழப்பு மட்டு மல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கான இழப்பு என்று இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். சுதந்திர போராட்ட வீரர், மக்கள் போராளி தோழர் என்.சங்கரய்யாவின் மறைவை யொட்டி திருப்பூரில் அனைத்து கட்சிகள் சார் பில் மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது. வெள்ளியன்று தியாகி குமரன் சிலை முன்பு தொடக்கிய இப்பேரணி மாநகராட்சி அலுவல கம் முன்பு நிறைவடைந்தது. இதைத்தொ டர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகை யில், சங்கரய்யா தேர்ந்தெடுத்த பாதை மிக வும் கடினமான பாதை. காவல்துறையால் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்த காலத்தில் துணிச்சலுடன் கம் யூனிஸ்ட் கட்சிக்காக பணியாற்றியவர். அரசி யல் விடுதலை, பொருளாதார விடுதலை மற் றும் சமூக விடுதலைக்காக தன் வாழ்நா ளையே அர்ப்பணித்தவர். தகைசால் தமிழர் விருது சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருதுக்கு பெருமை கிடைத் துள்ளது என்று பேசினார். இதையடுத்து பேசிய மூத்த தொழிற்சங்க தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சு.துரைசாமி சட்டமன்றத்தில் சங்கரய் யாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித் தும், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களோடு அரசியல் செய்த தலைவர் என்றும். தமிழ்நாடு என பெயர் மாற்றுவதற் கான போராட்டத்தில் சங்கரய்யாவின் பங்கு குறித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய, முன்னாள் அமைச்சர் மற்றும் அதி முக மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜி ஆர்க்கு சங்கரய்யா செய்த உதவிகளை நினைவு கூர்ந்து பேசினார்.
இதையடுத்து பேசிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், தோழர் சங்கரய்யாவின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கான இழப்பு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியச் சமூகத்திற்கான இழப்பு. தன்வாழ்நாளையே அர்ப்பணித்த தலை வனுக்கு காமராஜர் பல்கலைக் கழகம் அறி வித்த டாக்டர் பட்டதை வழங்காமல் ஆளுநர் ரவி தமிழ் சமூகத்திற்கு மிக பெரிய துரோ கத்தை செய்துவிட்டார் என்று கூறினார். இதை யடுத்து பேசிய திமுக வடக்கு மாநகர செயலா ளர் மற்றும் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், தமிழ் சமூகத்திற்காக சங்கரய்யா ஆற் றிய பணிகள் குறித்து பேசினார். இதைதொடர்ந்து, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் தலைவர் ரவிக்குமார், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் யாள். ஆறுச்சாமி, திராவிடர் விடுதலை கழகம் மாநில பொருளாளர் சு.துரைச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சன்.முத்துகுமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் ரோபோ.ரவிசந்திரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கர்ணன், மதிமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் சக்திவேல், சைமா செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச்செயலாளர் செ.முத்துகண்ணன் ஆகி யோர் சங்கரய்யா குறித்து பேசினர். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சங்க ரய்யாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.