districts

img

பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை

தருமபுரி, ஜூலை 10- தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தாய்மார் களுக்கான பாலூட்டும் தனி அறை பூட்டிய நிலையில் காணப் படுவதால், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் அவதி யடைந்து வருகின்றனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதி களவில் இருக்கும். இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் சார் பில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவற்கு வசதி யாக புறநகர் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்க ளுக்கான தனி அறை திறக்கப்பட்டது. ஆனால், இந்த அறை  திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் மிகவும் அவதிய டைகின்றனர். எனவே, பூட்டியே கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என பேருந்து நிலை யத்திற்கு வரும் பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.