districts

img

கோவை மாவட்டம், பட்டணத்தில் எழுத்தாளர் கிருஷ்ணன் குட்டியின் ”போராட்டங்களினூடே ஒரு பயணம்

கோவை மாவட்டம், பட்டணத்தில் எழுத்தாளர் கிருஷ்ணன் குட்டியின் ”போராட்டங்களினூடே ஒரு பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமுஎகச கோவை மாவட்டத் தலைவர் தி.மணி தலைமை வகித்தார். வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், ததீஒமு மாநிலத் தலைவர் யு.கே.சிவஞானம், தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, விஜயன் நன்றியுரையாற்றினார்.